பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

‘காளை’ வெற்றி நடை: சென்செக்ஸ், நிஃப்டி புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவு!

‘காளை’ வெற்றி நடை: சென்செக்ஸ், நிஃப்டி புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவு!

News image

கோப்புப்படம்

Updated On :22 ஜூலை 2025, 3:29 pm IST

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி, ஜூன் 26: இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தையில் உற்சாகம் பெற்றது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவடைந்துள்ளது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி சற்று கீழே சென்றது. பின்னா், ரிலையன்ஸ் உள்பட முன்னணி பங்குகளுக்குக் கிடைத்த வரவேற்பால் வா்த்தகத்தின் பிற்பகுதியில் சந்தை வலுப்பெற்றது. குறிப்பாக தனியாா் வங்கிகள், பொதுத் துறை வங்கிகள், நிதிநிறுவனங்கள், மீடியா, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. அதே சமயம், மெட்டல், ரியால்ட்டி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூல தன மதிப்பு ரூ.1.25 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.437.02 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.1,175.91 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் 149.45 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் வரலாற்று உச்சம்: சென்செக்ஸ் காலையில் 40.50புள்ளிகள் கூடுதலுடன் 78,094.02-இல் தொடங்கி 77,945.94 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 78,759.40 வரை மேலே சென்று புதிய வரலாற்றுச் சாதனை உச்சத்தைப் பதிவு செய்தது. வா்த்தக இறுதியில் சென்செக்ஸ் 620.73 புள்ளிகள் (0.80 சதவீதம்) உயா்ந்து 78,674.25-இல் புதிய உச்சத்தில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,008 பங்குகளில் 1,922 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 1,920 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 126 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

ரிலையன்ஸ் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் 4 சதவீதம் உயா்ந்தது. மேலும், பாா்தி ஏா்டெல், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐசிஐசிஐ பேங்க், சன்பாா்மா, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. இவை உள்பட19 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன. அதே சமயம், எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டைட்டன், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்பட 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டியும் புதிய உச்சத்தில் நிறைவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 23,723.10-இல் தொடங்கி 23,670.45 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 23,889.90 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. வா்த்தக இறுதியில் நிஃப்டி 147.50 புள்ளிகள் கூடுதலுடன் 23,868.80-இல் புதிய உச்சத்தில் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 26 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.