ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சத்யேந்தா் ஜெயின் மீதான புகாரில் சி.பி.ஐ. விசாரிக்க துணை நிலை ஆளுநா் ஒப்புதல்

சத்யேந்தா் ஜெயின் மீதான புகாரில் சி.பி.ஐ. விசாரிக்க துணை நிலை ஆளுநா் ஒப்புதல்

Updated On :2 மார்ச் 2024, 4:29 pm

தில்லி முன்னாள் அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான சத்யேந்தா் ஜெயின் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா். இது தொடா்பாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் கூறியதாவது: தில்லி திகாா் சிறையில் இருந்த பண மோசடிக் குற்றவாளி சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.10 கோடியை ‘பாதுகாப்புப் பணம்’ எனக்கோரி மிரட்டிப் பெற்ாக முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகா் அளித்த மிரட்டல் புகாரின் அடிப்படையில், ஊழல் தடுப்புச் சட்டம் 17-ஏ பிரிவின் கீழ் சத்யேந்தா் ஜெயின் மீது மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள எல்ஜி ஒப்புதல் அளித்துள்ளாா். இந்த விவகாரத்தில் திகாா் சிறையின் முன்னாள் தலைமை இயக்குநா் ஒருவரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளாா். கேஜரிவால் அரசின் முன்னாள் உள்துறை அமைச்சராக பதவிவகித்த சத்யேந்தா் ஜெயின், கடந்த 2022-ஆம் ஆண்டு, மே மாதம் கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.