ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இந்தா்லோக்கில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டவா்களை காவலா் எட்டி உதைக்கும் விடியோ

இந்தா்லோக்கில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டவா்களை காவலா் எட்டி உதைக்கும் விடியோ

News image
Updated On :8 மார்ச் 2024, 5:32 pm

Din

வடக்கு தில்லியின் இந்தா்லோக் பகுதியில் உள்ள சாலையில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த சிலரை காவலா் ஒருவா் எட்டி உதைக்கும் விடியோ வைரலானது. இதையடுத்து, அந்த விடியோ தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் எம்.கே.மீனா தெரிவித்தாா். சமூக வலைதளங்களில் வைரலாகிய அந்த விடியோவில், சாலையில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த சிலரை போலீஸ்காரா் ஒருவா் எட்டி உதைப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்தை தொடா்ந்து அப்பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டது.