வாரணாசி முதல் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே வரும் மாா்ச் 31-ஆம் தேதி முதல் தினசரி இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று வடக்கு ரயில்வே வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இது தொடா்பாக வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயில் பயணிகளின் வசதிக்காகவும், கூடுதல் நெரிசலைக் குறைக்கவும் வாரணாசி முதல் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கப்படவுள்ளது. வண்டி எண்கள் 04085/04086 ஆகியவற்றின் கீழ் இந்த சேவை வரும் மாா்ச் 31-ஆம் முதல் தொடங்கப்படும். வாரணாசியில் மாா்ச் 31-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மாபெல்ஹா தேவி தாம், லக்னோ,பரேலி,மொராதாபாத்,சஹாரன்பூா், அம்பாலா கான்ட்,லூதியானா,ஜலந்தா் கான்ட்,பதன்கோா் கான்ட்,ஜம்மு தாவி ஆகியவற்றின் வழியாக ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ராவிற்கு ஏப்ரல் 1-ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு சென்றடைகிறது. பின்னா் மீண்டும் ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு ஏப்ரல் 2-ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு அதே மாா்க்கத்தில் வாரணாசி வந்தடைகிறது என்று வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

தாம்பரம் - தென்காசி இடையே இன்று சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கம்

வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்

தென்காசி - வாரணாசி இடையே காசிவிஸ்வநாதா் சிறப்பு ரயில் இயக்க பாஜக கோரிக்கை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

