தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

விஷு பண்டிகையை முன்னிட்டு சென்னை - மங்களூரு இடையே ஏப். 6, 7 மற்றும் 13, 14 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 8:24 pm

விஷு பண்டிகையை முன்னிட்டு சென்னை - மங்களூரு இடையே ஏப். 6, 7 மற்றும் 13, 14 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விஷு பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி மங்களூரு சென்ட்ரல் நிலையத்திலிருந்து ஏப். 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06126) மறுநாள் ஏப். 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூா் நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் சென்னை எழும்பூரிலிருந்து ஏப். 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06125) மறுநாள் ஏப். 8, 15-ஆம் தேதிகளில் காலை 6.50 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில்கள் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், சோளிங்கா், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, சொரனூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை (ஏப். 4) காலை தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.