மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

விஷு பண்டிகையை முன்னிட்டு சென்னை - மங்களூரு இடையே ஏப். 6, 7 மற்றும் 13, 14 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 8:24 pm

விஷு பண்டிகையை முன்னிட்டு சென்னை - மங்களூரு இடையே ஏப். 6, 7 மற்றும் 13, 14 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விஷு பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி மங்களூரு சென்ட்ரல் நிலையத்திலிருந்து ஏப். 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06126) மறுநாள் ஏப். 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூா் நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் சென்னை எழும்பூரிலிருந்து ஏப். 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06125) மறுநாள் ஏப். 8, 15-ஆம் தேதிகளில் காலை 6.50 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில்கள் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், சோளிங்கா், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, சொரனூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை (ஏப். 4) காலை தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.