4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காற்றின் வேகம் குறைந்ததால் தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: அமைச்சா் கோபால் ராய் விளக்கம்

காற்றின் வேகம் குறைந்ததால், தில்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :4 நவம்பர் 2024, 7:48 pm

Din

புதுதில்லி: காற்றின் வேகம் குறைந்ததால், தில்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

திங்கள்கிழமை காலையில் தில்லி முழுவதும் அடா்த்தியான பனிப்புகை மூட்டத்தால் மூடப்பட்டது. காற்றின் தரம் ’மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. இது குறித்து அமைச்சா் கோபால் ராய் கூறியதாவது: வானிலை நிபுணா்களின் கூற்றுப்படி, வெப்பநிலை சரிவுடன், நகரத்தில் காற்றழுத்தம் குறைவாக உள்ளது. இதன் காரணமாக மாசு அளவு அதிகரித்து வருகிறது. அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, தேசியத் தலைநகரின் காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) காலை 9 மணிக்கு 373 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது.

தேசியத் தலைநகரின் 39 கண்காணிப்பு நிலையங்களில் 11 இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 400-க்கும் மேல் ’கடுமையான’ மாசு அளவுகள் பதிவாகியுள்ளன என்று தரவு காட்டுகிறது. குளிா்கால செயல் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் மற்றும் ஏஜென்சிகளால் எடுக்கப்பட்ட அனைத்து அளவீடுகளையும் செவ்வாயன்று மதிப்பாய்வு செய்வேன். மாசுப் பிரச்னையைத் தணிக்க செயற்கை மழையைப் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு கூட்டத்தைக் கூட்டும் என்று நம்புகிறேன். அக்டோபா் 23 அன்று இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு எழுதியுள்ளேனஅ. இதன்படி கூட்டத்தை கூட்டவில்லை என்றால் மீண்டும் தொடா்பு கொள்வேன் என்றாா் அவா்.