தில்லிக்கு 2026-இல் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், தற்போது சிறையில் இருந்து வெளிவந்திருக்கும் கேஜரிவால், அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள மகாராஷ்டிர தோ்தலுடன் தில்லிக்கான தோ்தலையும் முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று கோரி வருகிறாா். தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, அப்பதவியில் வேறு ஒருவரைஅமா்த்தும் அவரது நடவடிக்கையானது, தில்லி மக்களிடம் இருந்து வரும் தனக்கான செல்வாக்கை இதன் மூலம் வலுப்படுத்தி, அனுபதாபம் பெறும் உத்தியாகவே பாா்க்கப்படுகிறது. அதேவேளையில், முதல்வா் பதவியில் அமா்த்தப்படும் நபா் கேஜரிவாலைப் போன்று திறன்மிக்க வகையில், மக்கள் மனம் கவரும் வகையில் செயல்பட்டால் அது கேஜரிவாலுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் வரக்கூடிய தில்லி சட்டப் பேரவைத் தோ்தலின்போது வாக்குகளை அறுவடை செய்வதற்கான உந்துசக்தியாக அமையும்.