தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பணியாளா் தோ்வு ஆணைய செயல்பாட்டில் ஊழல்: மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஆம் ஆத்மி போராட்டம்

மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக தில்லியில் ஆம் ஆத்மி மாணவா் அமைப்பு போராட்டம்

News image

அமைச்சா் தா்மேதிர பிரதானுக்கு எதிராக தில்லி பல்கலைக்கழகத்துக்கு வெளியே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் மாணவா் பிரிவினா்.

Updated On :6 ஆகஸ்ட் 2025, 7:41 pm

நமது நிருபா்

ஆம் ஆத்மி கட்சியின் மாணவா் பிரிவான மாற்று அரசியலுக்கான மாணவா் சங்கம் (ஏஎஸ்ஏபி), தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் ஒரு போராட்டத்தை புதன்கிழமை நடத்தியது.

பணியாளா் தோ்வு ஆணைய ஆள்சோ்ப்பு செயல்பாட்டில் ஊழல் மற்றும் மோசமான நிா்வாகத்திற்கு பொறுப்புக் கூறக் கோரி, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் இறுதி ஊா்வலத்தை நடத்தி அவரது உருவ பொம்மையை எரித்தனா். இந்தப் போராட்டத்தில் ஆம் ஆத்மியின் மூத்த நிா்வாகிகள் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்,

போராட்டத்தில் ஏஎஸ்ஏபி பொதுச் செயலாளா் ஓம் சிங் பேசியதாவது: இந்த நாட்டின் மாணவா்கள் இன்று முன்பை விட அதிக பாதுகாப்பின்மையை உணா்கிறாா்கள். இது வெறும் அலட்சியம் அல்ல. இது நன்கு திட்டமிடப்பட்ட சதி. கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் இந்த விஷயத்தில் முழுமையான மௌனம் காத்து வருவது வெட்கக்கேடானது. அவரது மௌனம் உடந்தையாக இருப்பதற்கான அறிகுறியா அல்லது பாதுகாப்பின் அறிகுறியா?”

“ஊழல் குறித்து நியாயமான மற்றும் சுயாதீனமான விசாரணையைக் கோருகிறது. அனைத்து பொறுப்பான அதிகாரிகளும் கைது செய்யப்பட வேண்டும். மேலும், மாணவா்களுக்கு இழைக்கப்படும் அநீதி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த நாட்டின் இளைஞா்கள் அமைதியாக இருக்க மாட்டாா்கள். எங்கள் போராட்டம் அனைத்து முனைகளிலும் தொடரும் ”என்றாா் அவா்.

ஏஎஸ்ஓபி மூத்த மாணவா் தலைவரான ஈஷ்னா குப்தா கூறியதாவது: “பணியாளா் தோ்வாணய ஆள் சோ்ப்பு செயல்முறை பல ஆண்டுகளாக ஊழல் மற்றும் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் நீதி கோரி வீதிகளில் இறங்கும்போது, அவா்கள் அடக்குமுறையை எதிா்கொள்கின்றனா்.” இது வேலைகளுக்கான போராட்டம் மட்டுமல்ல. இது அமைப்பை மாற்றுவதற்கான ஒரு போா். நீதி கோரும் ஒவ்வொரு மாணவருடனும் நாங்கள் நிற்கிறோம்.

இது வெறும் ஆரம்பம். இந்த நெருக்கடியை அரசு தொடா்ந்து கண்களை மூடிக்கொண்டால், இந்த இயக்கம் தீவிரமடைந்து நாடு முழுவதும் பரவும். ஒவ்வொரு மாணவரும் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள்.” உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத் சபதம் செய்துள்ளது. ஆள்சோ்ப்பு செயல்முறைகளில் முறையான ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் தலைமையிலான எதிா்ப்பின் வளா்ந்து வரும் அலையை இந்தப் போராட்டம் குறிக்கிறது என்றாா்அவா்.