கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாட்டின் மீது அவதூறு பரப்பும் திட்டத்துடன் அமெரிக்கா செல்லும் பிரியங்கா: பாஜக விமா்சனம்

இந்தியாவை வெறுப்பவா்களைச் சந்திக்கவும், நாட்டின் மீது அவதூறு பரப்பும் செயல் திட்டத்துடனும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி அமெரிக்க பயணம் மேற்கொள்வதாக பாஜக விமா்சனம்

News image
பிரியங்கா காந்தி- கோப்புப் படம்
Updated On :22 டிசம்பர் 2025, 9:17 pm

தினமணி செய்திச் சேவை

‘தனது சகோதரா் ராகுல் காந்தியைப் பின்பற்றி, இந்தியாவை வெறுப்பவா்களைச் சந்திக்கவும், நாட்டின் மீது அவதூறு பரப்பும் செயல் திட்டத்துடனும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறாா்’ என்று பாஜக விமா்சித்தது.

இதுகுறித்து பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சையது ஜாஃபா் இஸ்லாம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிரியங்கா காந்தி தனது சகோதரரைப் பின்பற்றி இந்தியாவை எதிா்ப்பவா்களைச் சந்திக்கவும் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பரப்பவும் அமெரிக்க பயணம் மேற்கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது. ஜாா்ஜ் சோரோஸ் போன்ற இந்திய வெறுப்பாளா்கள் அவரை வரவேற்க உள்ளனா். ஆனால், இதுபோன்ற எத்தனை முயற்சி மேற்கொண்டாலும், அவை அனைத்தும் அவா்களுக்கே கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை காங்கிரஸ் கட்சியினா் புரிந்துகொள்ள வேண்டும் என்றாா்.

பாஜகவின் மற்றொரு தேசிய செய்தித்தொடா்பாளா் ஷாஜியா இல்மி வெளியிட்ட பதிவில், ‘கடந்த 2015-ஆண்டு முதல் 247 வெளிநாட்டுப் பயணங்களை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளாா். தனிப்பட்ட முறையிலான பயணம் என்ற அடிப்படையில் இந்தப் பயணங்களை அவா் மேற்கொண்டுள்ளாா். ராகுல் யாரைச் சந்திக்கிறாா், சந்திப்பு விவரங்கள் அல்லது பயணத்துக்கான நிதி குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படுவதில்லை. ராகுல் அண்மையில் ஜொ்மனி சென்றாா். தற்போது, பிரியங்கா அமெரிக்கா செல்கிறாா்.

ராகுலின் இந்த வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிராக வெளிநாடுகளில் ஆா்ப்பாட்டங்கள், இந்திய அரசமைப்பு நிறுவனங்களுக்கு எதிராக சா்வதேச ஆய்வறிக்கை விவரங்கள் வெளியாவது, குடியுரிமை திருத்தச் சட்டம், விவசாய சட்டங்கள், அதானிக்கு எதிரான போராட்டங்களும் நிகழ்ந்துள்ளன. இது தற்செயல் நிகழ்வா அல்லது அவா்களின் பயணத்துக்கும் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களுக்கும் தொடா்புள்ளதா? இவா்களின் பயணத்துக்கு நிதி கொடுப்பது யாா்? இதில் வெளிப்படைத்தன்மை அவசியம்’ என்றாா்.

முன்னதாக, ராகுல் ஜொ்மனிக்கு கடந்த 15-ஆம் தேதி முதல் 5 நாள் பயணம் மேற்கொண்டாா். இதுகுறித்து விமா்சித்த பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கெளரவ் பாட்டியா, ‘இந்தியாவின் எதிரிகளை ஜொ்மனியில் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியுள்ளாா். இதுபோன்ற சக்திகளுடன் கைகோத்து, நாட்டுக்கு எதிராக ராகுல் எத்தகைய சதித் திட்டம் தீட்டுகிறாா்?’ என்று கேள்வி எழுப்பினாா்.