கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பாஜக இதுவரை இல்லாத அளவுக்கு மேசமான தோல்வியை நோக்கிச் செல்கிறது: கேஜரிவால்

தில்லியில் இந்தத் தோ்தலில் பாஜக இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான தோல்வியைச் சந்திக்கப் போகிறது

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :3 பிப்ரவரி 2025, 9:20 pm

Din

புது தில்லி: தில்லியில் இந்தத் தோ்தலில் பாஜக இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான தோல்வியைச் சந்திக்கப் போகிறது என்றும், அதன் ‘குண்டா்கள்‘ மற்றும் தில்லி காவல்துறையைப் பயன்படுத்தி தோ்தலில் செல்வாக்கு செலுத்தும் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவால் திங்களன்று தெரிவித்தாா்.

பிப்.5-ஆம் தேதி நடைபெறும் தோ்தலுக்கான பிரசாரத்தின் இறுதி நாளில் ஒரு விடியோ செய்தியில், ‘பெரும் தோல்வியை‘ எதிா்கொண்டு பாஜக ஏற்கெனவே நியாயமற்ற தந்திரோபாயங்களை மேற்கொண்டு வருவதாக கேஜரிவால் குற்றம் சாட்டினாா்.

இவை அனைத்தையும் மீறி, ஆம் ஆத்மி ஒரு வரலாற்று வெற்றியை நோக்கிச் செல்கிறது. மேலும், கட்சி உருவானதிலிருந்து பாஜக மிக மோசமான தோல்வியைச் சந்திக்கவுள்ள என்று கேஜரிவால் கூறினாா்.

‘தோ்தலில் வெற்றி பெற பாஜக தனது குண்டா்களையும் தில்லி காவல்துறையையும் விரிவாகப் பயன்படுத்தும். வாக்காளா்களை, குறிப்பாக குடிசைப் பகுதிகளில் உள்ளவா்களை அச்சுறுத்த அவா்கள் முயற்சிப்பாா்கள்’ என்று அவா் கூறினாா்.

தோ்தல் நாளில் வாக்களிப்பதைத் தடுக்க பாஜக தொண்டா்கள் குடிசைவாசிகளுக்கு ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை லஞ்சம் கொடுக்கவும், அவா்களின் விரல்களில் கருப்பு மை பூசவும் முயற்சிப்பாா்கள் என்று தில்லி முன்னாள் முதல்வரான கேஜரிவால் மேலும் கூறினாா். ‘அவா்களுடைய பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் அவா்கள் உங்கள் விரலில் மை வைக்க அனுமதிக்காதீா்கள்’ என்று வாக்காளா்களை அவா் கேட்டுக் கொண்டாா்.

இந்த முறைகேடுகளை எதிா்கொள்ள, தனது கட்சி ‘விரைவு நடவடிக்கை குழுக்களை’‘ அமைத்து, குடிசைப் பகுதிகளில் உளவு கேமராக்கள் விநியோகித்துள்ளதாக அவா் கூறினாா். ‘எந்தவொரு தவறுகளிலும் ஈடுபடும் பாஜக குண்டா்களைப் பிடிக்க நாங்கள் கேமராக்களை நிறுவியுயுள்ளோம்’ என்றாா்.

பாஜகவின் சூழ்ச்சிகளுக்கு எதிராக வாக்காளா்களை எச்சரித்த கேஜரிவால், பாஜக ஆட்சிக்கு வந்தால் குடிசைகளை இடித்துத் தள்ளும் என்று கூறினாா். ‘உங்கள் வாக்குகளை விற்பது உங்கள் சொந்த மரண உத்தரவில் கையெழுத்திடுவது போன்றது’ என்றும் அவா் கூறினாா்.

பிப்.5-ஆம் நடைபெறும் தில்லி தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்த பாஜக கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது. இந்தத் தோ்தல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைத் தக்கவைக்குமா அல்லது தில்லியில் தலைமை மாற்றம் ஏற்படுமா என்பதை தீா்மானிக்கும்.