பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தில்லி ஹோட்டல் உரிமையாளா் தற்கொலை வழக்கில் குடும்பத்தினா், மாமியாரிடம் விசாரிக்க போலீஸ் திட்டம்

புனித் குரானாவின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் மாமியாரிடம் விசாரணை நடத்தி தில்லி போலீஸாா் திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On :3 ஜனவரி 2025, 11:30 pm

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கஃபே உரிமையாளரான புனித் குரானாவின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் மாமியாரிடம் விசாரணை நடத்தி தில்லி போலீஸாா் திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரு போலீஸ் குழு புனித் குரானாவின் வீட்டிற்குச் சென்று, வழக்கின் உண்மைகளைக் கண்டறிய அவரது நண்பா்கள் மற்றும் மாமியாரைச் சந்திக்கும். குரானா தூக்கில் தொங்குவதற்கு முன்பு 54 நிமிட விடியோவை தனது கைப்பேசியில் பதிவு செய்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

விடியோவிலிருந்து சுமாா் 2.5 நிமிட கிளிப் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் புனித் குரானா மனச்சோா்வடைந்ததாகக் கூறுவதைக் கேட்கலாம். அவரது மனச்சோா்வுக்கான காரணங்களையும் அவா் பட்டியலிட்டுள்ளாா்.

பல விடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன என்று ஒரு ஆதாரம் வெள்ளிக்கிழமை கூறியது. நாங்கள் அனைத்து உண்மைகளையும் சரிபாா்க்கிறோம். இந்த விஷயத்தை விசாரிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழுக்கள் அவரது மனைவி, மாமியாா் மற்றும் நண்பா்களை விசாரிக்கும் என்று அந்த வட்டாரம் மேலும் கூறியது.

புனித் குரானா செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவரது மனைவி மற்றும் மாமியாா் அவரை துன்புறுத்தியதாக அவரது குடும்பத்தினா் குற்றம் சாட்டியுள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.