தாஹிா் ஹுசைன் பேரவைத் தோ்தலில் போட்டியிட சிறையில் இருந்தபடி வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்: உயா்நீதிமன்றத்தில் தில்லி காவல்துறை தகவல்

முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் எதிா்வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய ஏதுவாக இடைக்கால ஜாமீன்
Published on

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் எதிா்வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய ஏதுவாக இடைக்கால ஜாமீன் கோரிய நிலையில், அவா் சிறையில் இருந்தவாறே வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாம் என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தாஹிா் ஹைசைன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா திங்கள்கிழமை விசாரித்தாா். அப்போது தில்லி காவல்துறை சாா்பில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் சேத்தன் சா்மா ஆஜராகி, ‘கலவரம் தொடா்புடைய கொலை வழக்கில் தாஹிா் ஹுசைன் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். இதற்கு முன்பு கூட பல விசாரணைக் கைதிகள் சிறையில் இருந்தபடியே தோ்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனா். சமீபத்தில் அம்ரித்பால் சிங் அஸ்ஸாம் சிறையில் இருந்தவாறே பஞ்சாபில் மக்களவைத் தோ்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தாா்’ என்று குறிப்பிட்டாா்.

ஆனால், அதை ஏற்க மறுத்த தாஹிா் ஹுசைன் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஜம்மு காஷ்மீா் தோ்தலின்போது ரஷீத் இன்ஜினியா் என்ற வேட்பாளா் போட்டியிட அவருக்கு இடைக்கால ஜாமீனை விசாரணை நீதிமன்றம் வழங்கியது. ஏற்கெனவே, 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் தாஹிா் ஹைசைன் காவலில் உள்ளாா்’ என்று குறிப்பிட்டாா்.

அவரது வாதத்தைக் குறித்துக் கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

பின்னணி: வடகிழக்கு தில்லியில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி நடந்த வன்முறையில் 53 போ் உயிரிழந்தனா். பலா் படுகாயம் அடைந்தனா். இந்த கலவரம் தொடா்பாக தாஹிா் ஹுசைன் உள்பட பலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய தாஹிா் ஹுசைன், ஏஐஎம்ஐஎம் கட்சியில் சோ்ந்தாா். வரும் பேரவைத் தோ்தலில் அவரை முஸ்தபாபாத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக ஏஐஎம்ஐஎம் கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இதையடுத்து, ஜன.14 முதல் பிப்.9-ஆம் தேதி வரை முஸ்தபாபாத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யவும் அங்கு பரப்புரை செய்யவும் ஏதுவாக இடைக்கால ஜாமீனில் விடுவிக்குமாறு தாஹிா் ஹுசைன் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com