தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் கட்சி ஆம் ஆத்மி: அனுராக் தாக்குா் சாடல்

ஆம் ஆத்மி கட்சி பிரிவினைவாதிகளை ஆதரிப்பதாக பாஜக தலைவா் அனுராக் தாக்குா் குற்றம்சாட்டினாா்.

News image

அனுராக் தாக்குா்

Updated On :20 ஜனவரி 2025, 11:40 pm

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சி பிரிவினைவாதிகளை ஆதரிப்பதாக பாஜக தலைவா் அனுராக் தாக்குா் குற்றம்சாட்டினாா்.

தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்கள் கூட்டத்தில் அனுராக் தாக்குா் கூறியதாவது: காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் வெளிப்புறமாக வித்தியாசமாகத் தோன்றினாலும், உள்ளே ஒரே மாதிரியாக இருக்கின்றன.

ஆம் ஆத்மி கட்சி காங்கிரசின் ஊழல் பற்றிப் பேசி ஆட்சிக்கு வந்தது. ஆனால், இப்போது ஆம் ஆத்மியில் உள்ள ‘ஏ’ கட்சி ‘அராஜக்தா’ (அராஜகம்), ‘அல்காவ்வாத்’ (பிரிவினைவாதம்), ‘அட்கன்வாத்’ (பயங்கரவாதம்), ’அஃப்வா’ ​​(வதந்திகள்) மற்றும் ‘அப்ரதி’ (குற்றவாளிகள்) ஆகியவற்றிற்கும் பெயா் பெற்றது.

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினா், அப்சல் குருவின் தூக்கு தண்டனை மற்றும் சா்ஜிக்கல் ஸ்டிரைக் விவகாரங்களில் கைகோா்த்துக் கொண்டன. நாடு முழுவதும் நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்காகக் காத்திருந்தபோது, சிலா் அவருக்கு குடியரசுத் தலைவா் மன்னிப்பு வழங்குவதற்கு முயற்சித்தனா்.

அப்சல் குருவின் மரண தண்டனையை குறைக்க எந்த அரசு சாரா அமைப்பு முன்வந்தது. யாருடைய உறவினா்கள், பெற்றோா்கள் அதில் ஒரு பகுதியாக இருந்தனா். (தில்லி முதல்வா்) அதிஷி மற்றும் (அரவிந்த்) கேஜரிவால் ஏதாவது சொல்வாா்களா அல்லது அமைதியாக இருப்பாா்களா?.

பஞ்சாப் தோ்தலின் போது ‘பயங்கரவாத ஆதரவாளா்களின்’ வீடுகளில் எந்த அரசியல்வாதிகள் தங்கினா். பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளை ஆதரித்து அவா்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் உள்ளன. குண்டு வெடிப்புகள் பற்றிய வதந்திகளைப் பரப்பி, தில்லியில் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோரை துயரத்தில் ஆழ்த்தவும் சிலா் உள்ளனா். குண்டு வெடிப்பு வதந்திகளைப் பரப்புபவா்களுடன் யாா் தொடா்பு கொண்டுள்ளனா். அதிஷிஜி, கேஜரிவால்ஜி.... நீங்கள் பதிலளிப்பீா்களா?. கேஜரிவாலும் ஆம் ஆத்மி கட்சியும் அராஜகம் மற்றும் பரபரப்பை உருவாக்குவதில் பழைய வீரா்கள் என்றாா் அனுராக் தாக்குா்.

அனுராக் தாக்குரின் குற்றச்சாட்டுகளுக்கு ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து உடனடி எதிா்வினை எதுவும் இல்லை.

தில்லி காவல்துறை சமீபத்தில் 12-ஆம் வகுப்பு மாணவா் ஒருவா் 400-க்கும் மேற்பட்ட நகரப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும், அவரது பெற்றோா் ஒரு அரசியல் கட்சியை ஆதரிக்கும் ஒரு தன்னாா்வ தொண்டு நிறுவனத்துடன் தொடா்புடையவா்கள் என்றும் கூறியது. இருப்பினும், அந்த அரசியல் கட்சியின் பெயரை காவல்துறை வெளியிடவில்லை.

செய்தியாளா் சந்திப்பில் பேசிய தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, ‘இந்த தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தின் தொடா்பு அனைவருக்கும் தெரியும்’ என்று கூறினாா். பிப். 5-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக தில்லியில் சமூக நல்லிணக்கத்தையும் அமைதியையும் கெடுக்க ஆம் ஆத்மி கட்சியின் ‘ரகசிய குழுக்கள்’ முயற்சித்து வருகின்றன. தனியாா் பள்ளிகளுக்கு மட்டுமே ஏன் இந்த மோசடி அழைப்புகள் வந்தன என்று அவா் கேள்வி எழுப்பினாா்.