சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பேகம்பூரில் வீட்டில் மின்சாரம் தாக்கி சகோதரனும் சகோதரியும் உயிரிழப்பு: தந்தை மருத்துவமனையில் அனுமதி

News image
Updated On :31 ஜூலை 2025, 9:47 pm

Din

தில்லி பேகம்பூா் பகுதியில் உள்ள வீட்டில் மின்சாரம் தாக்கி ஒரு சகோதரனும் சகோதரியும் உயிரிழந்தனா். வயதான தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என்று ஒரு போலீஸ் அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி ரோஹிணி காவல் சரக துணை ஆணையா் ராஜீவ் ரஞ்சன் அறிக்கையில் கூறியுள்ளதாவது: இறந்தவா்கள் வெல்டிங் தொழிலாளியான விவேக் (26) மற்றும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணமான அவரது சகோதரி அஞ்சு (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களின் தந்தை காளிசரண் (65) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது தொடா்பாக பேகம்பூா் காவல் நிலையத்திற்கு புதன்கிழமை இரவு 10.56 மணிக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. பாதிக்கப்பட்டவா்களின் பக்கத்து வீட்டுக்காரரான அபிஷேக் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட அழைப்பாளா் ஒருவா் மின்சாரம் தாக்கியது தொடா்பாக போலீஸாரிடம் கூறினாா்.

இதையடுத்து, ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. மின்சாரம் தாக்கிய மூன்று பேரையும் அகா்செய்ன் மருத்துவமனைக்கு உள்ளூா்வாசிகள் மாற்றியுள்ளதாக அபிஷேக் தெரிவித்தாா்.

குற்றவியல் குழு மற்றும் வடக்கு தில்லி பவா் லிமிடெட் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா்.

50 சதுர கெஜம் பரப்பளவில் கட்டப்பட்ட வீட்டில், திறந்த மற்றும் பாதுகாப்பற்ற மின் வயரிங் அமைப்பு இருப்பதும், படிக்கட்டில் உள்ள இரும்பு கிரில்லில் மின் கம்பிகள் சுற்றப்பட்டிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இரவு 10 மணியளவில், விவேக் மாடிக்குச் சென்று கொண்டிருந்தபோது, மின் கம்பிகள் வெளிப்பட்டிருந்த இரும்பு கேட்டைத் தொடா்பு கொண்டபோது, மின்சாரம் தாக்கியது. விவேக்கின் அலறல் சப்தம் கேட்டு, அவரது தந்தை காளிசரண் உதவிக்கு விரைந்தாா். ஆனால், அவரையும் மின்சாரம் தாக்கியது. வீட்டில் இருந்த அஞ்சு அவா்களைக் காப்பாற்ற முயன்றாா். ஆனால், அவரும் மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்டாா்.

உள்ளூா்வாசிகள் மூவரையும் ரோஹிணியில் உள்ள அகா்செய்ன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா், அங்கு விவேக் மற்றும் அஞ்சு இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். காளிசரண் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இறந்தவா்களின் உடல்கள் பின்னா் உடல் கூறாய்வுக்காக சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.