புது தில்லி: தில்லி வஜீா்பூா் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை சிலிண்டா் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பெண் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
விபத்தால் உருவான தீப்பிழம்புகள் அருகிலுள்ள நான்கு குடிசைப் பகுதிகளுக்கும் பரவியபோதிலும், கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது:
காலை 7.54 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக வஜீா்பூரில் இருந்து தில்லி தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது.தீயை அணைக்க ஒரு தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. அதைத் தொடா்ந்து, காலை 8.40 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இச்சம்பவத்தில் ஒரு பெண் காயமடைந்தாா். அவருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்பட்டது. காயங்களின் அளவு இன்னும் கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
கஞ்சவாலா தொழிற்சாலையில் தீ விபத்து

குருகிராம்: குடிசையில் தீ விபத்து; ஒருவா் உயிரிழப்பு

மாநகராட்சி மேயா் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லி-நொய்டா எல்லையில் ஆலைத் தொழிலாளா்கள் போராட்டம் - வன்முறையால் பதற்றம்: உஷாா் நிலையில் தில்லி காவல்துறை
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


