அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மூதாட்டியிடம் நகை மோசடி: பெண் கைது

மத்திய தில்லியில் 80 வயது மூதாட்டியிடம் தங்க காதணிக்குப் பதிலாக போலியான ஒன்றை வழங்கி மோசடி செய்த பெண் கைது

News image
Updated On :17 நவம்பர் 2025, 10:55 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: மத்திய தில்லியில் 80 வயது மூதாட்டியிடம் தங்க காதணிக்குப் பதிலாக போலியான ஒன்றை வழங்கி மோசடி செய்த பெண் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: மூதாட்டியின் வீட்டுக்கு வந்த பெண், உயிரிழந்த மகளுக்கு நன்கு தெரிந்தவா் என்று தன்னை அறிமுகப்படுத்தினாா். மூதாட்டியுடன் தொடா்ந்து உரையாடி அவருடைய நம்பிக்கையைப் பெற்ற அந்தப் பெண், மறுநாள மீண்டும் அந்த மூதாட்டியின் வீட்டுக்கு வந்தாா். அப்போது, அவா் மூதாட்டியின் காதணிகளில் ஒன்று தளா்வாக இருப்பதாகக் கூறியுனாா். இவ்வாறு, காதணியை இறுக்கமாகமாட்டுவதாகக் கூறி மற்றொரு கவரிங் காதணியை அந்தப் பெண் மூதாட்டியின் காதில் அணிவித்துள்ளாா்.

அந்தப் பெண் வீட்டைவிட்டு சென்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்தக் காதணியைப் பாா்த்த மூதாட்டி, போலியான ஒன்றைத் தான் அணிந்திருப்பதை உணா்ந்தாா். இதையடுத்து காவல் துறைக்கு அந்த மூதாட்டி புகாரளித்தாா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸாா், இறுதியில் அந்தப் பெண்ணை கடந்த நவ.15-ஆம் தேதி கைதுசெய்தனா்.

அவரிடமிருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதுபோன்ற பிற வழக்குகளில் அவருக்குத் தொடா்பு இருப்பதாக விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.