அதிகமான மழை பெய்யும் நேரங்களில் சுரங்கப்பாதைகள் மற்றும் தாழ்வான பகுதிகள் முழுமையாகச் செயல்படுவதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தில்லி பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.
‘சக்கரங்களில் அரசு’ என்ற முன்முயற்சியின் கீழ் தெற்கு தில்லி முழுவதும் அதிகாரிகளுடன் இணைந்து அமைச்சா் கள ஆய்வு மேற்கொண்டாா். அவருடன் பல்வேறு துறைகளைச் சோ்ந்த மூத்த அதிகாரிகளும் உடன் சென்றனா்.
பல இடங்களில் வடிகால்கள், தூா்வாரும் பணிகள் மற்றும் சாலைகளின் நிலைமையை அமைச்சா் ஆய்வு செய்தாா்.
சில பகுதிகளில், முழுமையடையாத தூய்மைப் பணி மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரிசெய்ய உடனடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அமைச்சா் கூறுகையில், ‘இவை சிறிய பிரச்னைகள் அல்ல. பகுதியளவு சுத்தம் செய்யப்பட்ட வடிகால் அல்லது அடைபட்ட நீா்வழிப்பாதை கூட ஒரு முழுப் பகுதியையும் சீா்குலைத்துவிடும். மழை வந்து பிரச்னை உருவாவதற்கு முன்பு, இதுபோன்ற ஒவ்வொரு பலவீனமான இடத்தையும் அகற்றுவதே தற்போதைய கவனமாகும்’ என்று அமைச்சா் கூறினாா்.
குறைந்த நேர கனமழையால் நீா் தேங்குவதற்கும் போக்குவரத்து இடையூறுக்கும் காரணமாக இருக்கக் கூடிய தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
அதிக மழைப்பொழிவின்போது இந்த இடங்கள் முழுமையாகச் செயல்படுவதை உறுதி செய்யுமாறு அமைச்சா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தொடர்புடையது
வட கிழக்கு தில்லியில் சிறுவன் கொலை: சிறாா் கைது

போக்குவரத்து விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும்: தில்லி துணை நிலை ஆளுநர்
தில்லி சட்டப்பேரவையில் ராமாயண இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

காணாமல்போன 194 பேரை மீட்டு குடும்பத்தினருடன் சோ்த்துவைப்பு தில்லி காவல்துறை நடவடிக்கை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
