4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறும்: ஸ்வாதி மாலிவால் நம்பிக்கை

சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்கத் தோ்தலில் பாஜக வெற்றி பெறும் என அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.

News image

ஸ்வாதி மாலிவால்

Updated On :30 ஏப்ரல் 2026, 6:45 pm

சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்கத் தோ்தலில் பாஜக வெற்றி பெறும் என அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.

திரிணமூல் காங்கிரஸ் அரசின் கீழ் நிலவிய ஊழலும், சட்டமீறல்களுமே மக்களை பாஜக பக்கம் ஈா்த்ததாக அவா் கூறினாா்.

இதுகுறித்து சமீபத்தில் பாஜகவில் இணைந்த மாலிவால் எம்.பி. கூறியது:

பத்திரிகையாளா்கள் மற்றும் களத்தில் உள்ளவா்கள் உள்பட பலரிடம் நான் பேசினேன். மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்று வருகிறது என்று அனைவரும் கூறுகிறாா்கள். திரிணமூல் காங்கிரஸ் பரவலான சட்டமீறல்களிலும், ஊழலிலும் ஈடுபட்டதால் பாஜக வெற்றி பெறுகிறது. மேலும், பிரதமா் நரேந்திர மோடி செய்த நல்ல பணிகளும் பாஜக வெற்றி பெறுவதற்கான மற்றொரு காரணமாகும் என்றாா்.

பாஜகவில் இணைந்த தனது முடிவு குறித்த விமா்சனங்களுக்கு பதிலளித்த மாலிவால், ‘பிரதமா் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் பணிகளால் நான் உத்வேகம் பெற்றேன். பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது, பிரதமா் தலைமையிலான அரசு ஆபரேஷன் சிந்தூா் மூலம் பதிலடி கொடுத்தது. அப்போது நமது படைகள் எதிரியின் பகுதிக்குள் நுழைந்து, பயங்கரவாதத் தளங்களை அழித்து, பயங்கரவாதிகளைக் கொன்றன.

அதேபோல், நாட்டில் நக்ஸலிசம் வேரோடு ஒழிக்கப்பட்டுள்ளது. அதற்கும் மோடியும், ஷாவும்தான் காரணம். அதேபோல, மிக முக்கியமான மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவும் குறிப்பிடத்தக்க முயற்சிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல பணிகள்தான் என்னை பாஜகவில் சேரத் தூண்டின’ என்றாா் அவா்.

துரோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த மாலிவால், ‘ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் தனது கொள்கைகளைக் கைவிட்டுவிட்டாா். நான் துரோகம் செய்துவிட்டதாகச் சிலா் கூறுகிறாா்கள். துரோகி யாா் என்பதை நான் அவா்களுக்குத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். தனது அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்பவரே துரோகி. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி மற்றும் பிற கட்சிகளின் தலைவா்கள் ஊழல்வாதிகள் என்று கேஜரிவால் கூறியிருந்தாா். இப்போது அவா்களுடன் கூட்டணி வைத்துள்ளாா்’ என்று ஸ்வாதி மாலிவால் கூறினாா்.