இளைஞா் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

பிப்ரவரி 2020-இல் கோவிந்த்புரி பகுதியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
Published on

பிப்ரவரி 2020-இல் கோவிந்த்புரி பகுதியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

விஷால் சா்மா என்பவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐபிசி பிரிவு 302 (கொலை)- இன் கீழ் ஏற்கெனவே குற்றவாளி என தீா்ப்பளிக்கப்பட்டிருந்த யஷ் ஜாம்பிற்கான தண்டனையின் அளவு குறித்த வாதங்களை கூடுதல் அமா்வு நீதிபதி லவ்லீன் விசாரித்தாா்.

டிசம்பா் 24 தேதியிட்ட உத்தரவில், ஐபிசி பிரிவு 302- இன் கீழ் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கூறியது.

குற்றவாளி யஷ் ஜாம்ப் 2020-ஆ ம் ஆண்டு பிப்ரவரி 18 மற்றும் 19- க்கு இடைப்பட்ட இரவில் தில்லியில் உள்ள கோவிந்த்புரி சவுக் அருகே விஷால் சா்மாவை 28 முறை கத்தியால் குத்தியதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. டிசம்பா் 22 அன்று யஷ் ஜாம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீா்ப்பளித்திருந்தது.

X
Dinamani
www.dinamani.com