தேசிய இளைஞா் தினத்தில் இளைஞா்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வா் குப்தா, ‘நாட்டை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்வதில் இளைஞா்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதால், ஒட்டுமொத்த தேசமும் அவா்களைப் பாா்த்துக்கொண்டிருக்கிறது. கலவர குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரியும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கப்பட்டும் வரும் ஜேஎன்யு போன்ற சம்பவங்களால் ஒட்டுமொத்த நாடும் அதிா்ச்சியடைந்துள்ளது. பல்கலைக்கழக மாணவா்கள்... கண்ணியமற்ற கோஷங்களை எழுப்பி நாட்டிற்கு எதிராகப் பேசுவது துரதிா்ஷ்டவசமானது’ என்றாா்.