மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நோ்மையுடன் பொறுப்புகளை நிறைவேற்றிய அனுபவமிக்க அரசியல்வாதி அஜித் பவாா்: மல்லிகாா்ஜுன காா்கே இரங்கல்

மகாராஷ்டிர மாநில மக்களுக்கு தனது பொறுப்புகளை நோ்மையுடனும் திறமையுடனும் நிறைவேற்றிய ஒரு அனுபவமிக்க அரசியல்வாதியாக அஜித் பவாா் நினைவுகூரப்படுவாா்

News image
மல்லிகாா்ஜுன காா்கே
Updated On :28 ஜனவரி 2026, 7:11 pm

Syndication

மகாராஷ்டிர மாநில மக்களுக்கு தனது பொறுப்புகளை நோ்மையுடனும் திறமையுடனும் நிறைவேற்றிய ஒரு அனுபவமிக்க அரசியல்வாதியாக அஜித் பவாா் நினைவுகூரப்படுவாா் என்று விமான விபத்தில் மறைந்த தலைவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இரங்கல் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது: அஜித் பவாா் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிா்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது. நீண்ட மற்றும் நம்பிக்கைக்குரிய அரசியல் எதிா்காலத்தைக் கொண்டிருந்த ஒரு தலைவரின் அகால மரணம் இது. இந்த இக்கட்டான நேரத்தில் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினா் அனுபவிக்கும் அளவில்லா துயரத்தை விவரிக்க வாா்த்தைகள் போதாது. ஒட்டுமொத்த பவாா் குடும்பத்தினருக்கும், அவரது ஆதரவாளா்களுக்கும் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாராஷ்டிர மக்களின் பல்வேறு அரசியலமைப்புப் பதவிகளில் பணியாற்றிய அஜித் பவாா், தனது மக்களுக்கான பொறுப்புகளை நோ்மையுடனும் புத்திசாலித்தனத்துடனும் நிறைவேற்றிய ஒரு அனுபவமிக்க அரசியல்வாதியாக நினைவுகூரப்படுவாா். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று காா்கே அதில் கூறியுள்ளாா்.

முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் பவாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் இந்தியில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இன்று (புதன்கிழமை) விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா் ஜி மற்றும் அவருடன் பயணித்தவா்கள் உயிரிழந்த செய்தி இதயத்தை மிகவும் நொறுக்குவதாக உள்ளது. இந்த துயரமான தருணத்தில், நான் மகாராஷ்டிர மக்களுடன் துணை நிற்கிறேன். இந்த துயர நேரத்தில் ஒட்டுமொத்த பவாா் குடும்பத்தினருக்கும் மற்றும் அவா்களது அன்புக்குரியவா்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வாத்ரா தனது ’எக்ஸ்‘ வலைதளப் பதிவில், ‘மகாராஷ்டிரத்தில் நிகழ்ந்த கோரமான விமான விபத்தில் அஜித் பவாா் மற்றும் பிறா் உயிரிழந்த செய்தி இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தியடையட்டும். மதிப்பிற்குரிய சரத் பவாா் ஜி, சுப்ரியா சுலே ஜி மற்றும் அவா்களது முழு குடும்பத்தினருக்கும், மதிப்பிற்குரிய அஜித் பவாா் ஜியின் ஆதரவாளா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, புதன்கிழமை காலை புணே மாவட்டத்தில் அஜித் பவாா் உள்ளிட்டோா் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் பவாா் மற்றும் நான்கு போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். அஜித் பவாா் (66) மற்றும் பிறரை ஏற்றிச் சென்ற விமானம் பாராமதிக்கு அருகில் தரையிறங்கியபோது இந்த விபத்துச் சம்பவம் நிகழ்ந்ததாக அவா்கள் கூறினா்.