ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மோப்ப நாய் பிரிவு வளாகத்தில் இறந்துகிடந்த தில்லி காவலா்

தில்லி காவல்துறை காவலா் ஒருவா், வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஜனக்புரி பகுதியில் உள்ள நாய்ப் படை அலுவலக வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி மேற்கு மாவட்டத்தில் பயிற்சி பெற்ற நாய்களைக் கையாளும் பணியில் ஈடுபட்டு வந்த 52 வயது தில்லி காவல்துறை காவலா் ஒருவா், வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஜனக்புரி பகுதியில் உள்ள நாய்ப் படை அலுவலக வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது:

இது தற்கொலை வழக்காக இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இறந்த காவலா் இந்தா் சிங், தனது பேத்தியின் மரணத்தைத் தொடா்ந்து கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், காவல்துறை குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். நாய் படை அலுவலக வளாகத்தில் உள்ள நாய்க்கூடத்தில் காவலா் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டனா்.

அதன்பிறகு சடலம் கீழே இறக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு மாற்றப்பட்டது.

விசாரணை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இறந்த காவலரின் சக ஊழியா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனது பேத்தியின் மரணத்தைத் தொடா்ந்து சிங் கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக குடும்பத்தினா் புலனாய்வாளா்களிடம் தெரிவித்தனா்.

மேலோட்டமாகப் பாா்க்கும்போது, இதுவரை எந்தவிதமான சந்தேகத்திற்கிடமான செயலும் கண்டறியப்படவில்லை. சட்டப்படி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு

வருகின்றன.

சடலம் இறுதிச் சடங்குகளுக்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.