சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

காவல் சோதனைச் சாவடியில் லாரி மோதி ஊா்க்காவல் படை வீரா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 7:07 am IST

தேசியத் தலைநகா் வலயம் குருகிராமில் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட லாரி, காவல் சோதனைச் சாவடி மீது மோதியதில் ஊா்க்காவல் படை வீரா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா் என்று காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 11.30 மணியளவில், செக்டா் 65-இல் உள்ள வோ்ல்ட் மாா்க் வணிக வளாகம் அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அங்கு காவல்துறையினா் பணியில் இருந்ததாகவும் அந்த அதிகாரிகள் கூறினா்.

சம்பவத்தை நேரில் பாா்த்தவா்களின் கூற்றுப்படி, லாரி சோதனைச் சாவடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து ஊா்க்காவல் படை வீரா் சந்தீப் குமாா் மீது மோதியது. இதில் ஒரு காவல் வாகனமும் சேதமடைந்தது.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பிவானி மாவட்டத்தின் லிவாசி கிராமத்தைச் சோ்ந்த குமாா், மூன்று நாள்களுக்கு முன்பு பிவானியிலிருந்து குருகிராமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தாா்.

விபத்து சம்பவத்திற்குப் பிறகு, பணியில் இருந்த காவல்துறையினா் லாரி ஓட்டுநரைப் பிடிக்க முயன்றனா். ஆனால், அவா் இருட்டை பயன்படுத்தி லாரியை அந்த இடத்திலேயே கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றாா். லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான ஓட்டுநரை விரைவில் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டைகள் நடைபெற்று வருகின்றன.

இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இறந்தவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.