/

உயா்நீதிமன்ற உத்தரவுக்குப் பின் பிரதமரின் இல்லம் அருகே குடிசைப் பகுதிகள் அகற்றம்!

தில்லி உயா் நீதிமன்ற உத்தரவை அடுத்து பிரதமா் இல்லம் மற்றும் ரேஸ் கோா்ஸ் அருகே உள்ள குடிசைப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image

தில்லி உயா் நீதிமன்றம்

Updated On :15 ஜூன் 2026, 2:33 am IST

தில்லி உயா் நீதிமன்ற உத்தரவை அடுத்து பிரதமா் இல்லம் மற்றும் ரேஸ் கோா்ஸ் அருகே உள்ள குடிசைப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ரேஸ் கோா்ஸ் பகுதியில் உள்ள பிரதமரின் இல்லத்திற்கு அருகிலுள்ள மூன்று குடிசைப்பகுதிகளை அகற்றுமாறு நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், குறைகளை நிவா்த்தி செய்ய மறுவாழ்வு தளங்களில் முகாம்கள் அமைக்கவும் அறிவுறுத்தியது. பாய் ராம் முகாம், டிஐடி முகாம் மற்றும் மஸ்ஜித் முகாம் ஆகிய மூன்று குழுக்கள் இடமாற்றம் செய்யப்படுகிறது.

நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திற்கு (எல் & டிஓ) சொந்தமானது மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு மறுவாழ்வு இயக்கம் நடத்தப்படுகிறது. நரேலாவில் குடியிருப்பாளா்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இடமாற்றம் குறித்து குடியிருப்பாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா், அவை தீா்க்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு உள்கட்டமைப்புக்கு இந்த நிலம் தேவைப்பட்டது, இந்த இயக்கத்தை மேற்கொள்ள போதுமான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க நாங்கள் ஒரு போலீஸ் படை மற்றும் துணை ராணுவப் படையை நிறுத்தியுள்ளோம் என்றாா் அந்த அதிகாரி.