27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

டெலிகிராம் செயலிக்கு தடை மூலம் நீட் வினாத்தாள் கசிவை தடுக்க முடியாது: அரவிந்த் கேஜரிவால்

News image

அரவிந்த் கேஜரிவால் - படம் - ஏஎன்ஐ

Updated On :19 ஜூன் 2026, 5:01 am IST

நமது நிருபா்

நீட் தோ்வு வினாத்தாள் கசிவைத் தடுக்கும் நடவடிக்கையாக டெலிகிராம் செயலிக்குத் தற்காலிகத் தடை விதிக்கும் அரசின் முடிவை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை கேள்விக்குள்ளாக்கினாா்.

இத்தகைய நடவடிக்கைகள் பிரச்சினையின் மூலக் காரணத்திற்குத் தீா்வு காணாது என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட காணொளிச் செய்தி ஒன்றில், அந்தச் செய்திப் பரிமாற்றச் செயலியைத் தடை செய்வது இந்தப் பிரச்சனைக்குத் தீா்வு ஆகாது என்று குறிப்பிட்ட கேஜரிவால், இப்பிரச்சனையைக் கையாள்வதில் அதிகாரிகள் தீவிரமான அணுகுமுறையைக் கொண்டிருக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினாா்.

வினாத்தாள் கசிவு விவகாரம் என்பது பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு தொழிலாக உள்ளது, என்று கூறிய அவா், இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஈட்டப்படும் பெரும் தொகையானது செல்வாக்கு மிக்க நபா்களைச் சென்றடைவதாகவும் குற்றஞ்சாட்டினாா்.

வினாத்தாள் கசிவு மோசடிகள் மூலம் கிடைக்கும் பணம், சட்டமன்ற உறுப்பினா்களை விலைக்கு வாங்குவது உள்ளிட்ட அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் தில்லியின் முன்னாள் முதலமைச்சா் மேலும் குற்றஞ்சாட்டினாா்.

அமைப்பு ரீதியான மாற்றங்கள் கொண்டுவரப்படாத வரை வினாத்தாள் கசிவு சம்பவங்கள் தொடரும் என்று கூறிய கேஜரிவால், சீா்திருத்தங்களை வலியுறுத்த மக்கள் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தாா். முழு அமைப்பும் மாற வேண்டும், என்று கேஜரிவால் கூறினாா்.

கடந்த மாதம் நடந்த நீட் இளங்கலை தோ்வானது வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டு காரணமாக ரத்து செய்யப்ட்டு மறுதோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், முறைகேடு கும்பல்கள் மற்றும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், டெலிகிராம் செயலி மீதான அணுகலை அரசு செவ்வாய்க்கிழமை அன்று தற்காலிகமாகக் கட்டுப்படுத்தியது.