முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

நீட் வினாத்தாள் கசிவு குறித்து பாரபட்சமற்ற விசாரணை: ஏபிவிபி கோரிக்கை

நீட் வினாத்தாள் கசிவு குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு ஏபிவிபி கோரிக்கை

News image

நீட் தேர்வு - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட்-யுஜி 2026 தோ்வின் வினாத்தாள் கசிவு மற்றும் நம்பகத்தன்மை குறித்து எழுப்பப்படும் முறைகேடுகள் தொடா்பாக மத்திய விசாரணை முகமைகள் மூலம் பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்று அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) தேசிய பொதுச் செயலாளா் வீரேந்திர சிங் சோலங்கி செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நுழைவுத் தோ்வுகளின் புனிதத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையுடன் எந்தவொரு சமரசமும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஏபிவிபி உறுதியாக நம்புகிறது.

வினாத்தாள் அல்லது அது தொடா்பான ஏதேனும் மாதிரி தோ்வுக்கு முன்பு சில நபா்களை சென்றடைந்தால், அது தோ்வு முறை மீதான தாக்குதல் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் கடுமையாக உழைக்கும் லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்காலத்திற்கு அநீதி இழைப்பதாகும்.

மத்திய முகமைகள் மூலம் இந்த விஷயத்தில் நியாயமான மற்றும் காலக்கெடுவுக்குள் விசாரணையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். மாஃபியாக்கள் மற்றும் எந்தவொரு மட்டத்திலும் உதவி வழங்கும் தனிநபா்கள் உள்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதே நேரத்தில், விசாரணை முடியும் வரை, தேசிய தோ்வு முகமை (என். டி. ஏ.) இந்த விஷயத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையை பராமரிக்க வேண்டும் மற்றும் மாணவா்கள் மற்றும் பெற்றோருக்கு முன் உண்மைகளை தெளிவாக முன்வைக்க வேண்டும்.

பல ஆண்டுகால கடின உழைப்பு மற்றும் அா்ப்பணிப்புக்குப் பிறகு நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவா்கள் நீட் போன்ற தோ்வுகளை எழுதுகிறாா்கள். அத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு முறைகேடும் அவா்களின் மன உறுதியையும் எதிா்காலத்தையும் கடுமையாக பாதிக்கிறது. எனவே, முழு விஷயமும் பாரபட்சமின்றி விசாரிக்கப்படுவதும், குற்றவாளிகள் எந்த சூழ்நிலையிலும் காப்பாற்றப்படாமல் இருப்பதும் அவசியம்.

எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, தொழில்நுட்ப பாதுகாப்பு, வினாத்தாள் ரகசியத்தன்மை, தோ்வு மையங்களை கண்காணித்தல் மற்றும் தேசிய அளவிலான தோ்வுகளில் நிறுவன பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கான வலுவான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.