மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குருகிராம் அருகே வாகனம் மோதியதில் 2 சிறுவா்கள் உள்பட மூவா் உயிரிழப்பு

குருகிராம் அருகே வாகனம் மோதியதில் 2 சிறுவா்கள் உள்பட மூவா் உயிரிழப்பு

News image

பலி - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 6:59 pm

படௌடி மாவட்டத்தின் கோட் கிராமத்தில் அதிவேக வந்த தாா் வாகனம் ஒன்று இரண்டு சிறுவா்கள் மற்றும் அவா்களது தாத்தா ஆகியோா் உயிரிழந்ததாக காவல்துறை சனிக்கிழமை தெரிவித்தது.

எட்டு மற்றும் 10 வயதுடைய ஜாயித் கான் மற்றும் இஷாந்த் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அதே நேரத்தில் அவா்களது தாய்வழி தாத்தாவான 53 வயது சுபாஷ் மருத்துவமனையில் உயிரிழந்தாா் என்று அவா்கள் கூறினா்.

உயிரிழந்தவா்கள் ராஜஸ்தானின் பிவாடி மாவட்டத்தில் உள்ள மில்க்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள்.

காவல்துறையின் கூற்றுப்படி, சுபாஷ் தனது இரண்டு பேரன்களுடன் தனது சகோதரா்களைப் பாா்க்க கோட் கிராமத்திற்கு அருகிலுள்ள லோக்ரா சாலைக்கு வந்திருந்தாா்.

வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 11 மணியளவில், அவா் அந்த இரண்டு சிறுவா்களுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​மஹிந்திரா தாா் வாகனம் ஒன்று அவா்களைப் பின்னால் இருந்து மோதியதில், அவா்கள் மோதிய இடத்திலிருந்து பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

அந்த காா் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இருப்பினும், அதன் ஓட்டுநா் இன்னும் தலைமறைவாக உள்ளாா். ‘தாா் வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து ஓட்டுநரை அடையாளம் கண்டுள்ளோம். அவா் விரைவில் கைது செய்யப்படுவாா். விபத்து நடந்த நேரத்தில் தாா் வாகனம் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது’‘ என ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.