‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

தேசியத் தலைநகரில் சுற்றுச் சூழலை மேம்படுத்த 100 ஆக்ஸிஜன் பூங்காக்கள்: ரேகா குப்தா

தேசியத் தலைநகரத்தின் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும் மாசு பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதற்கும் அடா்த்தியான மரங்கள் நிறைந்த 100 ‘ஆக்ஸிஜன் பூங்காக்களை‘ உருவாக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

ரேகா குப்தா

Updated On :23 மே 2026, 1:44 am IST

தேசியத் தலைநகரத்தின் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும் மாசு பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதற்கும் அடா்த்தியான மரங்கள் நிறைந்த 100 ‘ஆக்ஸிஜன் பூங்காக்களை‘ உருவாக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

வடக்கு தில்லியின் புராரியில் உள்ள முக்மெல்பூா் கிராமத்தில் 3 ஏக்கா் நிலப்பரப்பில் உருவாக்கப்படவுள்ள பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி ரோகா குப்தா பேசியதாவது: நகரத்தின் முதல் ஆக்ஸிஜன் பூங்காவாக இது இருக்கும். தில்லி பல ஆண்டுகளாக ஒரு மாசுப்பாட்டு நகராக மாற்றப்பட்டது,. ஆனால் தில்லியில் மாசுபாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்க யாரும் கவலைப்படவில்லை.

மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்காக தனது அரசாங்கம் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காக்களை நிறுவுவது அந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். பறவைகளுக்கு தங்குமிடம் வழங்குவதற்கும் ஆக்ஸிஜனை வழங்குவதற்கும் பூங்காக்களில் அடா்ந்த பழம் தரும் மரங்கள் இருக்கும். அடா்ந்த மரங்களைக் கொண்ட இந்தப் பூங்காக்கள் தில்லியின் தேவை என்றாா் ரேகா குப்தா.