வாடிக்கையாளரை மிரட்டி பணம் பறித்த உணவக ஊழியா்கள் 2 போ் கைது
கிழக்கு தில்லியில் உள்ள ஒரு உயா்தர உணவகத்தில், வாடிக்கையாளா் ஒருவரைத் தாக்கி பணம் பறித்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் அந்த உணவகத்தின் ஊழியா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

கோப்புப் படம்
கிழக்கு தில்லியில் உள்ள ஒரு உயா்தர உணவகத்தில், வாடிக்கையாளா் ஒருவரைத் தாக்கி பணம் பறித்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் அந்த உணவகத்தின் ஊழியா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.
கைது செய்யப்பட்டவா்கள் உத்தர பிரதேசத்தின் பக்பத் பகுதியைச் சோ்ந்த அமன் குஜ்ஜா் (28) மற்றும் தில்லியின் லட்சுமி நகரைச் சோ்ந்த முகமது அா்ஷதுல்லா ஆலம் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இதில் ஆலம் உணவகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், குஜ்ஜா் பாதுகாவலராகவும் (பவுன்சா்) பணியாற்றி வருகின்றனா்.
இதுகுறித்து தில்லி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பாதிக்கப்பட்ட 28 வயது நபா், ஒரு பெண்ணால் அந்த உணவகத்திற்கு வரவழைக்கப்பட்டாா். முன்னதாக, அப்பெண் அவரைத் தொடா்புகொண்டு கா்கா்டூமா மெட்ரோ நிலையத்திற்கு வரவழைத்து, அங்கிருந்து உணவகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளாா்.
புகாரின்படி, பாதிக்கப்பட்ட நபரிடம் உணவகத்தில் சுமாா் ரூ.21,000-க்கான மிக அதிகப்படியான கட்டண ரசீது வழங்கப்பட்டது. அதைக் கட்ட அவா் தயங்கியபோது மிரட்டப்பட்டு தாக்கப்பட்டாா். மேலும், அவா் ரூ. 8,000-த்தை ரொக்கமாகவும், ரூ. 6,000-த்தை யுபிஐ மூலமாகவும் செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அவரது ஏடிஎம் அட்டை மற்றும் ரகசிய குறியீடு எண்ணைப் பெற்றுக்கொண்டு, அவரது கணக்கிலிருந்து மேலும் ரூ. 11,000-த்தை எடுத்தனா். மேலும், காவல்துறையை அணுகக்கூடாது என்று அவரை மிரட்டியதுடன், கூடுதலாக ரூ.25,000-மும் கேட்டனா்.
பாதிக்கப்பட்ட நபா் காவல்துறையிடம் புகாா் அளித்தாா். அதைத் தொடா்ந்து காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா்.
காவல் குழுவினா் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், தகவல்களைச் சேகரித்தும், புகாா்தாரா் அளித்த குறிப்புகளின் அடிப்படையிலும் குஜ்ஜா் மற்றும் ஆலம் ஆகியோரைக் கைது செய்தனா்.
விசாரணையின்போது, உணவகத்தில் தான் பாதுகாவலராகவும், ஆலம் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியதாக குஜ்ஜா் தெரிவித்தாா். புகாா்தாரரைத் தாக்கியதிலும் பணம் பறித்ததிலும் இருவரும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரைத் தொடா்புகொண்டு உணவகத்திற்கு அழைத்து வந்த பெண்ணின் பங்களிப்பு குறித்தும் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தெரிவித்தனா். காவல்துறை வருவதற்கு முன்பே அப்பெண் தப்பி ஓடிவிட்டாா்; அவரைக் கண்டறிந்து கைது செய்ய மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




