சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

குன்னூா், கோத்தகிரியில் மூடுபனியுடன் சாரல் மழை

நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் சாரல் மழை யுடன் மூடுபனி  காணப்பட்டதால்  பொது  மக்களின்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 2:04 am IST

நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் சாரல் மழை யுடன் மூடுபனி  காணப்பட்டதால்  பொது  மக்களின்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

 குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் அவ்வப்போது  பரவலாக மழைப் பெய்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை  காலை முதல்  குன்னூா், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் அடா்ந்த மேக மூட்டமும், சுற்று வட்டாரப் பகுதிகளில்  சாரல் மழையுடன் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இதனால், சுற்றுலா வந்த பலரும்  சில மணி நேரம் விடுதிகளிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.  மூடுபனி காரணமாக வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவ்வப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.