தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

DIN

நாவல் வடிவில் மணிமேகலை - சத்தியப்பிரியன்; பக். 240; ரூ. 260; சுவாசம் பதிப்பகம், சென்னை-127; 81480 66645.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த இரட்டைக் காப்பியங்கள். மணிமேகலை கூறும் தத்துவக் கூறுகளும் வாழ்வியல் கருத்துகளும் அறம் தொடர்பான நிலைப்பாடுகளும் மிகவும் முக்கியமானவை. காதல் ,  துறவு வாழ்க்கைகளுக்கு இடையேயான அத்தனை முரண்பாடுகளையும் மணிமேகலை அலசும்.

நூலாசிரியர் இந்த நூலில் உள்ள அனைத்து ரசங்களையும் உள்ளடக்கி,  நாவல் வடிவில் எழுதியதே பெரிய சவால். தத்துவப் போக்குகளை எளிய நடையில் விளக்கியுள்ளார். 30 அத்தியாயங்களிலும் கூற்றுகள்,  பண்பாட்டின் பல கண்ணிகளைத் தொட்டுச் செல்கின்றன. 

பெருங்காப்பியத்தைச் சுருக்கியதாலோ என்னவோ,  விரைந்தோடுவது போன்ற நடை அமைந்திருக்கிறது.  ஆனாலும், வாசிக்கத் தொடங்கினால், சலிப்பின்றி விரைவாகப் படிக்கத் தோன்றுகிறது.

மணிமேகலையின் அழகில் மயங்கிய உதயகுமாரன் அவளைத் தொந்தரவு செய்வது,  துறவியான அவள் காயசண்டிகையின் உருவில் மாறுதல், பின்னர் தொடரும் ஆபத்துகள், மணிபல்லவத்தீவை மையமாக வைத்துச் சொல்லப்படும் அமுதசுரபி...  என்று விரிந்து இறுதியில் காஞ்சி நகரில் முடிகிறது.

சிறார்களும் படிக்க ஏற்ற வகையில் அமைந்துள்ளது நூலின் சிறப்பாகும். தமிழ் இலக்கியம் படிப்போரும்,  தமிழார்வலர்களும் படித்து பாதுகாக்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.