தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கம்பன் படைத்த காண்டங்கள்

கம்பன் படைத்த காண்டங்கள் - 13 அறிஞர்களின் சொல்லோவியங்கள்; பக்.312; ரூ.250; பாரதி புக் ஹவுஸ்,  வேலூர்-4; 99424 41751.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 7:41 am

DIN

கம்பன் படைத்த காண்டங்கள் - 13 அறிஞர்களின் சொல்லோவியங்கள்; பக்.312; ரூ.250; பாரதி புக் ஹவுஸ்,  வேலூர்-4; 99424 41751.

கம்ப ராமாயணத்தில் உள்ள ஆறு காண்டங்கள் குறித்து 13 தமிழறிஞர்களின் விரிவான கருத்துகளை இந்த நூல் பதிவு செய்துள்ளது.

ராமாயணம் என்ற காவியம் பாரதத்துக்கு மட்டுமே உரித்தானது அல்ல. நாடு, மொழி, இனம் கடந்து அனைத்து வருங்காலத் தலைமுறையினருக்கும் வாய்மை, ஒழுக்கம், நீதி 
உள்ளிட்ட அறநெறிகளை வலியுறுத்த அதன் தேவை இருக்கிறது.

கம்ப ராமாயணம் இயற்றப்பட்டு பல நூறாண்டுகள் கடந்தும் இன்னும் அதன் கவிதைகளில் ஈர்ப்பு குறையவில்லை. எத்தனையோ ஆய்வுகள் வந்துள்ளபோதும் இன்னும் ஏராளமான புதிய செய்திகள் கம்ப ராமாயணத்தில் இருக்கின்றன.

எத்தனையோ கதாபாத்திரங்கள் இருப்பினும் "அனுமன்' பாத்திரத்தில்தான் கம்பன் தன்னையும் தனது மாட்சிமையையும் புலப்படுத்துகிறார் என தக்க ஆதாரத்துடன் நிறுவுகிறார் முனைவர் உலக.தேன்மொழி.

ராமாயணத்தில் முக்கிய பாத்திரமாக மட்டுமல்லாது மகாபாரதத்திலும், குறிப்பாக குருஷேத்திர போரின்போது அர்ஜுனனுக்கு மானசீகமாக அனுமன் எப்படி பலம் சேர்த்தான் என்பதை முனைவர் நா.குமாரி சுவைபட விளக்கியுள்ளார்.

தன் மனைவியை மீட்க, இன்னொருவன் மனைவியைத் தன் வயப்படுத்திய வாலியின் உதவியை நாடக்கூடாது என்பதாலேயே இராமனை சுக்ரீவனிடம் கம்பர் அனுப்பினார் என முதுமுனைவர் இரா.சங்கர் உரைத்திருப்பது வாலி வதம் குறித்து மற்றுமொரு கோணத்தை முன்வைக்கிறது.

அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்ற கம்ப ராமாயணத்தின் நோக்கத்துக்கு வலு சேர்க்கும் விதத்தில் ஒவ்வொரு கட்டுரையும் பல புதிய கோணங்களை உள்ளடக்கி விளக்குகிறது.  கம்பன் ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இந்தநூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.