தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மறவர் நாட்டு மண்டேலா (விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்)

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 7:41 am

DIN

மறவர் நாட்டு மண்டேலா (விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்) - டாக்டர் எஸ்.எம். கமால்; பக். 216; ரூ. 220; காவ்யா, சென்னை- 24; 044-23726882.

மறவர் நாட்டின் வரலாற்றுச் செய்திகளை ஒரு நாவலுக்கு இணையான விறுவிறுப்புடன் எழுதியிருக்கிறார் நூலாசிரியர். 1987-இல் முதலில் வெளியிடப்பட்டு, முற்றிலும் கிடைக்காதிருந்த நூலை 35 ஆண்டுகளுக்குப் பின்னர் மறுபதிப்புச் செய்து,  மீண்டும் வரலாற்று  வாசகர்களுக்குக் கிடைக்கச் செய்திருக்கின்றனர்.

வரலாற்று ஆய்வாளரான நூலாசிரியர் எண்ணற்ற சான்றுகளுடனும் ஏராளமான தரவுகளுடனும் ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் வரலாற்றை எழுதியுள்ளார்.

மறவர்களின் ஏழு கிளைகளில் செம்பி நாட்டு மறவர் கிளையைச் சேர்ந்த ராமநாதபுரம் அரசர்களான சேதுபதிகள். இவர்களின் ஆட்சித் தொடக்கம், முன்னோர்கள் பற்றிய முறையான வரலாற்றுச் செய்திகள் கிடைக்காவிட்டாலும் இவர்களின் மூலத்தையொட்டிய,  பதிவிலுள்ள அனைத்துத் தகவல்களையும் ஆசிரியர் தந்துவிடுகிறார்.

தாயுடனும் தமக்கைகளுடனும் 12 வயதில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் வைக்கப்பட்டு, சூழ்ந்துவந்த நெருக்கடிகளால் அஞ்சிய நவாப்பால் 20 வயதில் விடுதலை செய்யப் பெற்று, பின்னர் 12 ஆண்டுகள் மன்னராக ஆட்சிபுரிகிறார் நூலின் நாயகனான ரிபெல் சேதுபதி எனப்படும் முத்துராமலிங்க சேதுபதி. இந்த 12 ஆண்டுகளில் ராமநாதபுரம் மறவர் சீமை பெற்றவையெல்லாம் பெரும் பேறுகள்.

கோயில்கள் பராமரிப்புக்காக இன்றைய தேவஸ்தானத்தின் முன்னோடியான தரும மகமை, யாத்திரை செல்வோருக்காக எண்ணற்ற சத்திரங்கள், அவற்றுக்காக நிலங்கள்,  அரசுத் துறை வணிகம், கைத்தறி ஏற்றுமதி, நாணயச் செலாவணி மாற்றம் மூலம் வருவாய் என அளப்பரிய சாதனைகள்.

சிவகங்கைச் சீமை தோன்றிய வரலாற்றுடன் சேதுபதி மன்னர்களுடனான  மோதல்கள், ஆங்கிலேய  கம்பெனியுடனான மோதல்கள், கம்பெனிப் படையெடுப்பும் போரும், சேதுபதியின் வீழ்ச்சியும் மரணமும் என விரிந்த வரலாற்றைக் கடும் உழைப்பால் பெற்ற தரவுகளுடன் தந்துள்ளார் ஆசிரியர். சேதுபதி மன்னர்கள் பற்றி அறிய உதவும் சிறப்பான நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.