தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

DIN

குற்றமும் கருணையும் - இளம் ஐ.பி.எஸ். அதிகாரியின் தூத்துக்குடி அனுபவங்கள் - வி.சுதர்ஷன்( தமிழில்: மு.குமரேசன்);  பக்.224; ரூ.275; காலச்சுவடு, நாகர்கோவில்-629001; 04652-278525.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த  ஐபிஎஸ் அதிகாரி அனூப் ஜெய்ஸ்வால்,  தமிழக காவல் துறையில் பணியாற்றிய போது தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவங்களின் தொகுப்பே இந்நூல்.

மதுரையில் களப் பயிற்சியை நிறைவு செய்த அனூப், அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பொறுப்பேற்றவுடன் பாப்பாக்குடியில் நிகழ்ந்த ஒரு கொலையில் துரிதமாகச் செயல்பட்டு நடவடிக்கையை எடுத்தார். அதன் பிறகு மணிமுத்தாறில் புதிதாக உருவாக்கப்பட்ட 9-ஆவது பட்டாலியனுக்கு தலைமையேற்றார். 

அங்கிருந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.  பல வழக்குகள், குற்றச் செயல்கள் குறித்து அனூப்பின் விசாரணை குறிப்புகள் விறுவிறுப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில்,  புன்னக்காயலில் நிகழ்ந்த படுகொலைகள், பாறைப்பட்டி ரௌடி தர்மாவை சுட்டுக்கொன்றது,  கள்ளச்சாராய விற்பனையை ஒழித்தது, 80 வயது மூதாட்டிக்கு பென்ஷன் வழங்க ஏற்பாடு செய்தது, மைனர் சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தியது ஆகியன குறிப்பிடத்தக்கது.

காவல் அதிகாரிகளிடம் தோழமை உணர்வுடன் பழகும் அனூப், எந்தச் சூழலிலும் தனது சகாக்களை பலிகடா ஆக்காமல் அவர்களைப் பாதுகாக்கிறார். தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் குற்றவாளிகளிடமும் சரி, தன்னிடம் புகாரளிக்க வரும் பொதுமக்களிடமும் சரி மனிதாபிமானம், கருணை, பொறுமைக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு நேர்மையோடு சட்டத்தை அணுகுகிறார். 

ஐபிஎஸ் பயிற்சியின்போது தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றம் சென்று தனது உரிமையை நிலைநாட்டிய சம்பவமும் நெகிழ வைக்கிறது. 

சோதனையில் துவளாமல், சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து, நேர்மையுடன் பணிபுரியவும், நீதிக்காகப் போராடவும் இந்நூல் வழிகாட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.