தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

DIN

பொற்கை சுவாமி - சத்தியப் பிரியன்; பக். 184; ரூ.210;  சுவாசம் பதிப்பகம், சென்னை-127; 81480 66645.

திருவண்ணாமலை சித்தர்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் புண்ணிய பூமி. இங்கு சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி,  விட்டோபா சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள் போன்றோர் ஆன்மிகத்தில் பெரும் பங்களிப்பை செய்துள்ளனர்.

இதில்,  'தங்கக் கை கவாமிகள்'   என்று அழைக்கப்பட்ட மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்.  அதிகம் பேசாமல். மிகக் குறைந்த வார்த்தைகளில் உலகையே ஸ்தம்பிக்கச் செய்யும் பேருண்மைகளைச் சொல்லி விடும் பித்து நிலைச் சித்தர். அவரது இளமைப்பருவம், ஆன்மிகப் பயணம், பக்தர்களுக்கு வழங்கிய அருளாசி  சிறப்பாக நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

அவரால் பக்தர்கள் பெற்ற நேரடி அனுபவமும் படிக்கும்போது, வியப்பையே ஏற்படுத்துகிறது.

காஞ்சி காமாட்சியின் அருளாசியில் சேஷாத்ரி சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்களும் அருமையானவை. இதுபோன்ற பிரம்மஞானிகளின் வாழ்க்கையை  நூலாக எழுதும்போது அடுத்த தலைமுறைகளும் அவர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளும் என்பதற்காகவே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது என்ற நூலாசிரியரின் குறிப்பு உண்மைதான். சேஷாத்ரி சுவாமிகளோடு, அவரது சமகாலத்தவரான பகவான் ரமணர், சமகாலத்து ஞானிகள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. அழுக்குத் துணியோடு வலம் வந்தாலும் சித்தர்களுக்கு மக்கள் அளிக்கும் மரியாதை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அழகுத் தமிழில் எழுதப்பட்டிருப்பதும் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.