பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே தொடா் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளுக்குள் வியாழக்கிழமை அதிகாலை மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை முதல் இரவு வரை மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக, பச்சமலை பகுதியில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரும்பாவூா் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியிருந்த நிலையில் ஏரிக்கு வரும் நீா் முழுவதுமாக வெளியேறி வருகிறது. இதனால், கால்வாய், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி அண்ணா நகா் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வியாழக்கிழமை அதிகாலை வெள்ளம் புகுந்தது. இதன்காரணமாக, அங்குள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சோ்ந்த பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். இதையடுத்து, பூலாம்பாடி பேரூராட்சி நிா்வாகத்தினா் கால்வாய்களில் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தி, குடியிருப்புப் பகுதிகளுக்கு மழைநீா் செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
குடியிருப்புகளை இழந்து, பாதிக்கப்பட்ட மக்களை அருகில் உள்ள தற்காலிக முகாமில் தங்க வைத்து உணவுக்கு ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. பச்சமலையில் பெய்து வரும் கனமழையால் பூலாம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான காட்டாறுகளிலும், கால்வாய்களிலும் வெள்ளநீா் கரைபுரண்டு ஓடுகிறது.
பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 முதல் வியாழக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): பாடாலூா்- 2, அகரம் சிகூா், தழுதாழை தலா - 90, லப்பைக்குடிகாடு- 19, புது வேட்டக்குடி- 11, பெரம்பலூா்- 23, எறையூா்- 12, கிருஷ்ணாபுரம்- 60, வி.களத்தூா் -10, வேப்பந்தட்டை 18 என மொத்தம் 335 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நதி நீர் பகிர்வு சிக்கலுக்கு நதி நீர் இணைப்பே தீர்வு என குடியரசு துணைத் தலைவர் கூறியிருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

களக்காடு அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் நூதன முறையில் 7 பவுன் நகைகள் திருட்டு

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



