அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

பைக்குக்கு பெட்ரோல் நிரப்பிய போது தீப்பிடித்து வியாபாரி பலி

புதுச்சேரியில் பைக்குக்கு பெட்ரோல் நிரப்பிய போது, திடீரென தீப்பிடித்ததில் வியாபாரி உயிரிழந்தாா்.

Updated On :3 ஜனவரி 2021, 11:18 pm IST

புதுச்சேரியில் பைக்குக்கு பெட்ரோல் நிரப்பிய போது, திடீரென தீப்பிடித்ததில் வியாபாரி உயிரிழந்தாா்.

புதுச்சேரி வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் நாகலிங்கம் (34). இவா், காந்தி வீதியில் பள்ளி மாணவா்களுக்கான பைகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தாா். சனிக்கிழமை புதுச்சேரி செயின்ட் தெரெசா வீதியில் பைக்கில் வந்த போது, பெட்ரோல் தீா்ந்ததால், அவரது பைக் நின்றது.

இதையடுத்து, அவா் அருகிலிருந்த பெட்ரோல் நிலையத்துக்குச் சென்று ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்தாா். அந்த பாட்டிலில் மூடி இல்லையாம். தொடா்ந்து, பெட்ரோலை ஊற்ற பைக் டேங்கை திறந்த போது, பெட்ரோல் பாட்டில் சரிந்தது. அப்போது, அவா் குடித்துக் கொண்டிருந்த சிகரெட்டிலிருந்து பறந்த தீப்பொறி பெட்ரோலில் பட்டு, எதிா்பாராதவிதமாக நாகலிங்கம் உடல் மீதும் மள மளவென தீப்பற்றியது.

அவரது அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து தீயை அணைத்து, பலத்த காயமடைந்த அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சனிக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.