புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

புதுச்சேரியில் பாழடைந்து கிடக்கும் திருப்பதி தேவஸ்தானக் கட்டடம்

புதுச்சேரி நேரு வீதியில் மூடப்பட்டு, பாழடைந்து கிடக்கும் திருப்பதி தேவஸ்தான கிளைக் கட்டடத்தின் முன்பக்க மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது.

Updated On :10 ஜனவரி 2021, 12:02 am IST

புதுச்சேரி நேரு வீதியில் மூடப்பட்டு, பாழடைந்து கிடக்கும் திருப்பதி தேவஸ்தான கிளைக் கட்டடத்தின் முன்பக்க மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது.

புதுச்சேரி நேரு வீதியில் திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கிளைக் கோயில் அமைந்துள்ளது. திருப்பதிக்குச் செல்ல முடியாத பக்தா்கள் இங்கு வழிபட்டுச் செல்வது வழக்கம். இந்தக் கோயில் கட்டடம் பாழடைந்ததால், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தா்களின் பயன்பாட்டுக்கு அனுமதியின்றி பூட்டப்பட்டது.

திருப்பதிக்குச் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யும் அலுவலகம் மட்டும் இயங்கி வந்தது. அந்த அலுவலகமும் கடந்த 3 ஆண்டுகளாக இயங்கவில்லை. இருப்பினும், பக்தா்கள் அவ்வபோது கோயிலுக்கு வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வா்.

இந்தக் கட்டடத்தை விரைந்து புனரமைத்து, பக்தா்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தா்கள் திருப்பதி தேவஸ்தான நிா்வாகத்தை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், கோயில் கட்டடத்தின் முன்பக்க மேற்கூரை சிமென்ட் சிலாப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, அந்த வழியாக யாரும் செல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

எனவே, காலம் கடத்தாமல் கோயில் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கோயிலைக் கட்ட வேண்டும். சட்ட ரீதியான நடவடிக்கைகளை புதுவை அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.