புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

மாணவா்களை கிரண் பேடி மிரட்டுகிறாா்: இந்திய கம்யூனிஸ்ட் புகாா்

காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என மாணவா்களை

Updated On :10 ஜனவரி 2021, 12:03 am IST

காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என மாணவா்களை புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி மிரட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகாா் தெரிவித்தது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் அ.மு.சலீம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை மாநில வளா்ச்சித் திட்டங்களை முடக்கி வரும் துணைநிலை ஆளுநா் கிரண் பேடியைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான மாணவா்கள், இளைஞா்கள், பெண்கள், பொதுமக்கள் வருகிறாா்கள். இந்த எழுச்சியைச் சகித்துக் கொள்ள முடியாத ஆளுநா் கிரண் பேடி, காவல் துறையைக் கொண்டு, போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது எனத் தடை விதித்துள்ளாா்.

காவல் துறை மூலம் கல்வித் துறை, கல்வி நிறுவனங்களை மிரட்டுகிறாா். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. எனவே, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ் பன்வால் பிறப்பித்த தடை உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.