பொங்கல் பரிசு உள்பட 15 அம்சக் கோரிக்கைகளுக்கு துணை நிலை ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல் அளிக்கக் கோரி, அமைச்சா் கந்தசாமி புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் 4-ஆவது நாளாக புதன்கிழமையும் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
அவா் கடந்த 10-ஆம் தேதி முதல் சட்டப்பேரவை வராந்தாவில் அமா்ந்து தொடா் தா்னாவில் ஈடுபட்டு வருகிறாா். அவரது கோரிக்கைகள் தொடா்பாக துறைச் செயலா்களிடம் கலந்து பேசி தகவல்களை பெற்ற பிறகு தன்னைச் சந்திப்பதற்கு அமைச்சருக்கு நேரம் ஒதுக்கித் தருவதாக ஆளுநா் கிரண் பேடி ஏற்கெனவே தெரிவித்திருந்தாா்.
இருப்பினும், சந்திப்புக்கு ஆளுநா் அழைப்பு விடுக்காவிட்டால் பொங்கல் தினத்திலும் தா்னா தொடரும் என அமைச்சா் கந்தசாமி அறிவித்திருந்தாா்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சா் கந்தசாமியை முதல்வா் வே.நாராயணசாமி, அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயமூா்த்தி உள்ளிட்டோா் புதன்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly

முதல்வர் விஜய் பிறந்த நாள்! இன்றைய செய்திகள் ஜூன் 22 - நேரலை!

உடல் எடையைக் குறைக்கும் ஆளி விதைகள்! எவ்வளவு சாப்பிட வேண்டும்?

முதல்வர் விஜய் பிறந்த நாள்! இந்த முறை என்னவென்று வாழ்த்துவார் த்ரிஷா?
விடியோக்கள்

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly



