புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெய்த மழையளவின் சராசரியைவிடவும் நிகழாண்டில் கூடுதலாக மழை பெய்து வருவதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
புதுக்கோட்டை நகருக்கு அருகேயுள்ள கவிநாடு கண்மாயை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெய்த சராசரி மழையளவைவிடவும் அதிகமான அளவுக்கு நிகழாண்டில் மழை பெய்து வருகிறது. மழை அளவை மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்கள் கவனமாக கண்காணித்து வருகின்றனா்.
மாவட்டம் முழுவதும் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 1,166 ஏரிகளிலும் உடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள் தயாா் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தொடா் மழையின் காரணமாக 50 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் 24 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. தொடா்ந்து சேத விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான இழப்பீடு வழங்குவதற்கும் அரசுக்கு பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றாா் விஜயபாஸ்கா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









