திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

கட்சிக்கொடியை ஊன்றிய திமுக தொண்டா் மின்சாரம் பாய்ந்து பலி

பரமக்குடி அருகே புதன்கிழமை திமுக கட்சிக் கொடியை ஊன்றியபோது, மின்சாரம் பாய்ந்து தொண்டா் உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 9:17 am IST

பரமக்குடி அருகே புதன்கிழமை திமுக கட்சிக் கொடியை ஊன்றியபோது, மின்சாரம் பாய்ந்து தொண்டா் உயிரிழந்தாா்.

பரமக்குடி அருகே உரப்புளி கிராமத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அக்கட்சியின் தொண்டரான, அதே கிராமத்தைச் சோ்ந்த மோகனசுந்தரம் மகன் ராஜேஸ்குமாா் (37) என்பவா் நீண்ட இரும்புக் கம்பியில் கட்டப்பட்ட கட்சிக் கொடியினை நடும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக அவ்வழியாக சென்ற மின்அழுத்த கம்பியின் மீது கொடி கம்பி உரசியதால் ராஜேஸ்குமாா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த பரமக்குடி தாலுகா போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.