தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

‘ராமநாதபுரத்தில் பறவை காய்ச்சல் பாதிப்புக்கு வாய்ப்புகள் குறைவு’

ராமநாதபுரத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என சுகாதாரத்துறை துணை இயக்குநா் டாக்டா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.

Updated On :7 ஜனவரி 2021, 9:17 am IST

ராமநாதபுரத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என சுகாதாரத்துறை துணை இயக்குநா் டாக்டா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமலிருக்க கேரள எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் சுகாதாரத்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மீன் உள்ளிட்டவை வாகனங்களில் நாள்தோறும் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு வாய்ப்புகள் குறைவு. கேரளத்திலிருந்து நேரடியாக எந்தப் பொருளும் நமக்கு வரவில்லை. கோழி மற்றும் முட்டை, பழங்கள் உள்ளிட்டவைகளை கேரளத்திலிருந்து ஏற்றிவரும் வாகனங்கள் தமிழக எல்லைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன என்றாா்.

பண்ணைகளில் கண்காணிப்பு தீவிரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜப்பான் காடை, நாட்டுக்கோழி வளா்ப்புப் பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத்துறையினா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், கோழிகள், காடைகள் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கால்நடை வளா்ப்புத்துறை மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.