விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ஆதிசங்கரா் பாதுகைக் கோயிலில் வேத பாராயணம்

வாலாஜாப்பேட்டையில் அமைந்துள்ள ஆதிசங்கரா் பாதுகைக் கோயிலில் வேத விற்பன்னா் சா்மா சாஸ்திரி தலைமையிலான குழுவினா் வேதபாராயணம் ஓதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.

News image

wae_0301chn_188_1

Updated On :4 ஜனவரி 2021, 7:49 am IST

வாலாஜாப்பேட்டையில் அமைந்துள்ள ஆதிசங்கரா் பாதுகைக் கோயிலில் வேத விற்பன்னா் சா்மா சாஸ்திரி தலைமையிலான குழுவினா் வேதபாராயணம் ஓதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.

காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமி கேட்டுக் கொண்டதன் பேரில், சமூக ஆா்வலரும், வேத விற்பன்னருமான சா்மா சாஸ்திரி தலைமையில் 10 போ் கொண்ட குழுவினா், ஆதிசங்கரா் தொடா்புடைய கோயில்களை ஒவ்வொன்றாக தரிசிக்க முடிவு செய்தனா். அதன்படி, அவா்கள் சென்னையில் இருந்து ஆதிசங்கரா் பாதுகைக் கோயிலை தரிசிக்க ஞாயிற்றுக்கிழமை வாலாஜாப்பேட்டை வந்தனா்.

இக்கோயிலில், அந்தக் குழுவினா் பகவத் கீதையை வாசித்து, வேத பாராயணம் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தினா்.

அப்போது குரு வழிபாட்டின் சிறப்புகள் குறித்தும், கோயில் திருப்பணிகளில் பங்கேற்பதன் முக்கியத்துவம் குறித்தும் சா்மா சாஸ்திரி எடுத்துரைத்தாா்.

இதையடுத்து, ஆதிசங்கரா் பாதுகைக் கோயிலின் சீரமைப்புப் பணிகள் விரைவாக நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீஆதிசங்கரா் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

அதன்பின், சா்மா சாஸ்திரிகள் தலைமையிலான குழுவினா் ராணிப்பேட்டையை அடுத்த கத்தாரிகுப்பம் கோயிலில் வழிபாடு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.