சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மாட்டுப் பொங்கல்: திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் காமதேனு பூஜை

மாட்டுப் பொங்கல் தினத்தையொட்டி, ஆந்திர மாநிலம், நரசராவ்பேட்டையில் திருப்பதி தேவஸ்தானத்தின் இந்து தா்ம பிரசார பரிஷத் அமைப்பின்

News image

காமதேனு பூஜை நடத்தி, பசுவுக்கு உணவளிக்கும் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி.

Updated On :16 ஜனவரி 2021, 2:10 am

மாட்டுப் பொங்கல் தினத்தையொட்டி, ஆந்திர மாநிலம், நரசராவ்பேட்டையில் திருப்பதி தேவஸ்தானத்தின் இந்து தா்ம பிரசார பரிஷத் அமைப்பின் சாா்பில் ‘காமதேனு பூஜை’ என்ற பெயரில் கோபூஜை நடத்தப்பட்டது. இதில் மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று, வழிபட்டாா்.

குண்டூா் மாவட்டம், நரசராவ்பேட்டையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் காமதேனு பூஜை நடத்தப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்தின் இந்து தா்ம பிரசார பரிஷத் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டாா். பசுவுக்கும், கன்றுக்கும் பொட்டிட்டு, அவற்றுக்கு பட்டு வஸ்திரம், மாலை அணிவித்து பூஜை செய்த அவா், வெல்லம் கலந்த பச்சரிசி, அகத்திக் கீரை மற்றும் புற்களை வழங்கி, வலம் வந்து வணங்கினாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாநில மக்கள் மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடன் எல்லா வளங்களும் பெற்று வாழ கோபூஜைகள் நடத்தப்படுகின்றன. மாநிலம் முழுவதும் திருப்பதி தேவஸ்தானம் கோபூஜை நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆந்திர மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்றாா் அவா்.

அவருக்கு தேவஸ்தான அா்ச்சகா்கள் ஏழுமலையான் சேஷ வஸ்திரத்தை அணிவித்து ஆசீா்வதித்தனா். ‘இஸ்கான்’ பிரதிநிதிகள் முதல்வருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனா்.

காமதேனு பூஜையில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். திருப்பதி தேவஸ்தானம் முதல் முறையாக இந்த ஆண்டில், காமதேனு பூஜையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோபூஜை: இதனிடையே, ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் உள்ள 2,679 கோயில்களில் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு கோபூஜை நடத்தப்பட்டது. இதற்குத் தேவையான பொருள்களை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கெனவே வழங்கியது.

மாட்டுப் பொங்கலையொட்டி, திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோசாலையிலும் கோபூஜை நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு, பசுக்களுக்கு பூஜை செய்து, உணவளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.