ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்! – எப்புவியும்
பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று சிறப்பால்.
அவதரித்த ஊர்: திருவெஃகா (காஞ்சிபுரம்)
மாதம்: ஐப்பசி
நட்சத்திரம்: திருவோணம்
அம்சம்: பாஞ்சஜன்யம் (சங்கு)
அருளிச் செய்த பிரபந்தம்: முதல் திருவந்தாதி
எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர்
வண்மை மிகு கச்சி மல்லை மாமயிலை – மண்ணியில் நீர்
தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்
ஓங்குமுறையூர் பாணனூர்.
.
அவதரித்த ஊர் : திருக்கடல்மல்லை (மகாபலிபுரம்)
மாதம்: ஐப்பசி
நட்சத்திரம்: அவிட்டம்
அம்சம்: கதாயுதம்
அருளிச் செய்த பிரபந்தம்: இரண்டாம் திருவந்தாதி.
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த – பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து.
அவதரித்த ஊர்: திருமயிலை (மயிலாப்பூர்)
மாதம்: ஐப்பசி
நட்சத்திரம்: சதயம்
அம்சம்: நந்தகம் (வாள்)
அருளிச் செய்த பிரபந்தம்: மூன்றாம் திருவந்தாதி.
தையில் மகம் இன்று தாரணியீர்! ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் – துய்ய மதி
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள்.
அவதரித்த ஊர்: திருமழிசை
மாதம்: தை
நட்சத்திரம்: மகம்
அம்சம்: ஸ்ரீசக்ரம்
அருளிச் செய்த பிரபந்தங்கள் : நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்.
ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை
பாரோர் அறியப் பகர்கின்றேன் – சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்.
அவதரித்த ஊர்: திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)
மாதம்: வைகாசி
நட்சத்திரம்: விசாகம்
அம்சம்: சேனை முதலியார்
அருளிச் செய்த பிரபந்தங்கள்: திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி.
ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்து உதித்த
சீராரும் சித்திரையில் சித்திரை நாள் – பாருலகில்
மற்றுள்ள ஆழ்வார்கள் வந்து உதித்த நாள்களிலும்
உற்றது எமக்கு என்று நெஞ்சே ! ஓர்.
அவதரித்த ஊர்: திருக்கோளூர்
மாதம்: சித்திரை
நட்சத்திரம்: சித்திரை
அம்சம்: குமுத, வைநதேயம்
அருளிச் செய்த பிரபந்தம்: கண்ணிநுண்சிறுத்தாம்பு.
மாசிப் புனர்ப்பூசம் காண்மின் இன்று மண்ணுலகீர்
தேசு இத்திவசுத்துக்கு ஏது என்னில் – பேசுகின்றேன்
கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால்
நல்லவர்கள் கொண்டாடும் நாள்.
அவதரித்த ஊர்: திருவஞ்சிக்களம்
மாதம்: மாசி
நட்சத்திரம்: புனர்ப்பூசம்
அம்சம்: கௌஸ்துபம்
அருளிச் செய்த பிரபந்தம்: பெருமாள் திருமொழி.
இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே !
இன்றைக்கு என்ன ஏற்றம் எனில் உரைக்கேன் – நன்றிபுனை
பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த
நல் ஆனியில் சோதி நாள்.
அவதரித்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர்
மாதம்: ஆனி
நட்சத்திரம்: சுவாதி
அம்சம்: கருடன்
அருளிச் செய்த பிரபந்தம்: பெரியாழ்வார் திருமொழி.
இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத
வாழ்வான வைகுந்தவான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளா ராய்
அவதரித்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர்
மாதம்: ஆடி
நட்சத்திரம்: பூரம்
அம்சம்: பூதேவி
அருளிச் செய்த பிரபந்தங்கள் : திருப்பாவை, நாச்சியார் திருமொழி.
மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மாநிலத்தீர்
என் இதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் – துன்னு புகழ்
மாமறையோன் தொண்டரப்பொடியாழ்வார் பிறப்பால்
நான்மறையோர் கொண்டாடும் நாள்.
அவதரித்த ஊர்: திருமண்டங்குடி
மாதம்: மார்கழி
நட்சத்திரம்: கேட்டை
அம்சம்: வநமாலா.
அருளிச் செய்த பிரபந்தங்கள்: திருப்பள்ளியெழுச்சி, திருமாலை.
கார்த்திகையில் உரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர்!
வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் – ஆத்தியர்கள்
அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதற்பின்
நன்குடனே கொண்டாடும் நாள்.
அவதரித்த ஊர்: உறையூர்
மாதம்: கார்த்திகை
நட்சத்திரம்: ரோஹிணி
அம்சம்: ஸ்ரீவத்ஸம்
அருளிச் செய்த பிரபந்தம்: அமலனாதிபிரான்.
பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை அறிந்திலையோ
ஏது பெருமை இன்றைக்கு என்ன என்னில் – ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்.
அவதரித்த ஊர்: திருவாலி திருநகரி
மாதம்: கார்த்திகை
நட்சத்திரம்: கார்த்திகை
அம்சம்: சாரங்கம் (வில்)
அருளிச் செய்த பிரபந்தங்கள்: பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல், திருவெழுகூற்றிருக்கை.
தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்?
அருளிச் செயலை அறிவார் ஆர் ? – அருள் பெற்ற
நாதமுனி முதலான நம் தேசிகரை அல்லால்
பேதை மனமே ! உண்டோ பேசு.
.
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து.