அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் பற்றி ஜாதகம் மூலம் அறிய முடியுமா?

ஒரு மனித வாழ்வு என்பது  இரண்டு பெரிய பிரிவுகளில் தான் அமைந்துள்ளது. அதாவது, அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டம் இதுதான் மனித வாழ்வை நகர்த்திச் செல்லுகிறது.
அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் பற்றி ஜாதகம் மூலம் அறிய முடியுமா?

ஒரு மனித வாழ்வு என்பது  இரண்டு பெரிய பிரிவுகளில் தான் அமைந்துள்ளது. அதாவது, அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டம் இதுதான் மனித வாழ்வை நகர்த்திச் செல்லுகிறது. தொடர்ந்து அதிர்ஷ்டம் கொண்டவரும் இல்லை, தொடர்ந்து துரதிர்ஷ்டம் கொண்டவரும் இல்லை. ஆனால் வெகு சிலர் மட்டுமே தொடர்ந்து துரதிர்ஷ்டத்தையும், அதிர்ஷ்டத்தையுமே அனுபவிப்பதைக் காண முடிகிறது. அது ஏன் அவ்வாறு அவர்களுக்கு மட்டும் நடைபெறுகிறது என்பதனை சில விளக்கங்கள் மூலம் இந்த கட்டுரையில் காணலாம்.

முதலில் அதிர்ஷ்டம் என்றால் என்னென்ன?

அது, உடல் ஆரோக்கியத்தைச் சார்ந்தது, தனி நபர் ஆளுமை தன்மை, அரசியலில் தொடர்ந்து வெற்றி, நிதி ஆதாயம், கல்வியால் நன்மைகள், மனவலிமைகள், பெற்றோரை முதுமையிலும் காக்கும் குழந்தைகள், குழந்தைகளை அருமையாக அன்பாக வளர்க்கும் பெற்றோர்கள், இது போன்று சொல்லிக்கொண்டே போகலாம்.

மேலே கூறப்பட்டவை அனைத்தும் ஒருவருக்குத் தொடர்ந்து கிடைப்பதுவே அதிர்ஷ்டம் ஆகும். அவரை நாம் கொடுத்துவைத்தவர் எனச் சொல்கிறோம். அவன் என்னப்பா அதிர்ஷ்டகட்டை எனவும் சொல்வதுண்டு. சிலருக்கு சிறிது காலம் அதிர்ஷ்டம் கிடைத்து பின்னர் ஒரு நாள் விலகுவதும் உண்டு. அப்படியே தலைகீழாய் நிலைமை மாறுவதும் உண்டு.

துரதிர்ஷ்டம் என்றால் என்னென்ன?

துயரங்கள், துயரங்களின் ஆதாரங்கள், அனைத்துவித கவலைகள், துன்பங்கள், பிரச்னைகள், உடல் மற்றும் மன ரீதியான சிதைவுகள், கெட்ட குழந்தைகள் போன்றவையே துரதிர்ஷ்டம் ஆகும். ஒருவரின் ஜாதகம் என்பது 12 கட்டங்களை கொண்டதாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்து இருப்பீர்கள். பொதுவாக அதில் 6 வீடுகள் ஜாதகருக்கு சாதகமானதாக இருக்கும். மீதமுள்ள 6 வீடுகள் ஜாதகருக்கு சாதகமற்றதாகவே இருக்கும். அதிலும் மிகவும் மோசமான வீடுகள் 6, 8, 12ஆம் வீடுகள் தான். இதனை தந்திர (TRIK HOUSES ) வீடுகள் என்பர். அதனை விரிவாகக் காண்போம். ஏன் என்றால், இந்த வீடுகளின் போக்கை அறிவதே மிகச் சிரமமாகும். இதனை நன்கு ஆராய்ந்தால் தான் தெளிவாக தெரிய முடியும்.

சிலருக்கு, சிலவற்றிற்கு, சில நிலைகளில் இந்த வீடுகள் நல்லன போன்று தோன்றும் / செய்யும் ஆனால் அதே சமயம் சிலருக்கு, சிலவற்றிற்கு, சில நிலைகளில் தீயதை மட்டுமே செய்யும். இதனை ஒவ்வொரு வீடாகக் காணலாம்.

பொதுவாக ஜோதிடத்தில் ஜனன கால ஜாதகத்தை வைத்து பலனை ஓரளவுக்குத் தான் சொல்லமுடியும். துல்லியமாகப் பலனைக் காண, பல்வேறு பிரிவு விளக்கப்படம்  (DIVISIONAL CHARTS) மூலம் தான் காண இயலும். ஒவ்வொரு பிரிவும் ஒருவித பலனைத் துல்லியமாகக் கூறும்.

அனைத்தையும் கண்டு பலன் சொல்வதென்பது நிச்சயம் வெகு சிரமமான ஒன்று. அதற்கு முதலில் சரியான பிறப்பு குறிப்பு தேவை. அடுத்து இதனைப் பொறுமையாக ஆய்வு செய்ய ஆழ்ந்த அறிவும் அனுபவ ஞானமும் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக அவசரமும் இதனை காண்பதற்குரிய தட்சிணை தருவதில் சிக்கல் ஏற்படும். அதனாலேயே இதனை அதிகமாக விரிவாக யாரும் காண்பதில்லை.

மேலெழுந்த வாரியாக ராசி சக்கரம் எனும் D -1 , நவாம்ச சக்கரம் எனும் D - 9 மட்டுமே கண்டு பலனைக் கூறிவிடுகின்றனர். அதில் சில விஷயங்கள் நிச்சயம் தெரியவரும். ஆனால் மேம்படுத்தப்பட்ட சக்கரங்களாகிய பல்வேறு பிரிவு விளக்கப்படம் (DIVISIONAL CHARTS) மூலமாக தெள்ளத்தெளிவாக, ஆணி அடித்தாற்போல் கூற முடியும்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 6ஆம் வீடு நோய், காயம், துக்கம், விபத்துக்கள், மன சமநிலையற்ற ஏற்ற தாழ்வுகள், துரதிர்ஷ்டங்கள் போன்றவை குழந்தைகள் மற்றும் சகோதர்களிடை தோன்றுவனவற்றை விளக்கிக் கூறும் இடமாகும். ஆகவே இந்த 6ஆம் இடத்தை நன்கு ஆய்வு செய்திடல் வேண்டும். அதாவது, 6ஆம் வீட்டின் அதிபதி, ஆறாம் வீட்டில் உள்ள கிரகம், ஆறாம் வீட்டைப் பார்க்கும் கிரகம், 6 ஆம் வீட்டோடு தொடர்புடைய / ஆறாம் அதிபதியோடு தொடர்புடைய கிரகங்கள், இவை அனைத்தையும் கண்டு தான் தீர்மானிக்க வேண்டும். பொதுவாகவே ஒவ்வொரு ராசியும் ஒரு உடல் உறுப்பை குறிப்பிடுவதாகவே இருக்கும். இந்த ஆறாம் வீடு அதிகமாகப் பாதிப்புக்குள்ளாகும் இடம் என்றால் அது மிகையாகாது. அதேபோல் இந்த ஆறாம் வீட்டில் இருக்கும் கிரகம் அதன் காரக உறுப்பைப் பாதிப்படையச் செய்தே தீரும். 

உதாரணமாக, புதன் இங்கு இருப்பின், தோல் சம்பந்தமான நோயைத் தரும். அதேபோல் குரு இருப்பின் (லீவர்) கல்லீரல் பாதிப்படையச் செய்யும். இது உதாரணத்திற்கு கூறப்பட்டவை இதுபோல் ஒவ்வொரு கிரக காரகத்துத்தையும் அலசி ஆராய்ந்து பலன் காணுதல் அவசியமாகிறது.

ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 8ஆம் வீடு  நீண்ட ஆயுள், மரபுகள், எப்படிப்பட்ட இறப்பு (மரணத்தின் இயல்பு), அவமானம், சீரழிவு மற்றும் மரணம் தொடர்பான விவரங்கள் போன்றவற்றை அறியலாம்.

இதனை அறிவதற்கு 8ஆம் வீட்டு அதிபதியின் நிலையைக் காணவேண்டும். மேலும் 8ஆம் வீட்டில் உள்ள கிரகம் அதன் நிலையை, உடன் இணைந்துள்ள கிரகங்கள் மற்றும் அதனைப் பார்க்கும் கிரகங்களின் நிலையை காணுதல் அவசியம்.

இங்கு இந்த 8ஆம் வீட்டில் அமர்ந்துள்ள பாபகிரகங்களை கொண்டு ஒருவரின் இயற்கைக்கு மாறான இறப்பை உரைக்க முடியும். அதாவது தற்கொலை, விபத்து, கொலை போன்றவற்றை அறியலாம். அதேசமயம் சுப கிரகங்களின் பார்வை, சாரம் போன்ற தொடர்பு பெற்றிருந்தால், இயற்கை மரணம் நிகழ வாய்ப்புள்ளது. இயற்கை மரணம் என்பது, வயது முதிர்ந்த காலத்தில் அல்லது ஏதேனும் ஒரு நாள்பட்ட நோயால் எனலாம்.

ஆறாம் வீடும், எட்டாம் வீடும் தொடர்பு பெற்றிருந்தால், நிச்சயம் நோய்வாய்ப்பட்டு இறப்பு நிகழலாம். இந்த 8ஆம் வீடு என்பது இளவயது மரணம் (குறுகிய வாழ்க்கை) நிகழ்வதைக் கூட சித்தரிக்கிறது.

ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 12ஆம் வீடு இழப்புகள், ஊதாரித்தனம், செலவுகள், பறிமுதல் போன்றவை பற்றி அறிய முடியும். இதனை 12ஆம் வீட்டு அதிபதியை கொண்டும், 12 ஆம் வீட்டில் உள்ள கிரகங்களைக்கொண்டும், 12ஆம் வீட்டைப் பார்க்கும் கிரகங்களைக் கொண்டும், 12ஆம் வீட்டோடு இணைவு கொண்ட கிரகங்களைக் கொண்டும் அறியமுடியும். இந்த 12ஆம் வீட்டு அதிபதி ஏதேனும் ஒரு லக்கின பாவ வீட்டோடும் அதன் அதிபதியுடன் தொடர்புகொள்ளும்போது, அதன் தசை மற்றும் புத்திகளில், நிச்சயம் அதீத கடன், செலவுகள் கட்டுக்கு அடங்காமல் போதல், பேராசையால் ஆரோக்கியமற்ற பொல்லாத கம்பெனிகளுடன் தொடர்பு கொள்ளுதல் போன்றவை நிகழும்.

இந்த 6, 8, 12 வீடுகள் இது போல் பலவித பிரச்னைகளை நிச்சயம் தருவதாய் இருக்கும். ஆனால், அதுவே இந்த 6, 8, 12 வீடுகளுடன் அதன் அதிபதிகள் மாற்றி அமரும்போது நல்ல பலன்களை தருவதாய் அமைகிறது. அதாவது 6ஆம் அதிபதி 8ல், 8ஆம் அதிபதி 6ல், 6ஆம் அதிபதி 12ல் இதுபோன்று மாற்றி அமரும்போது நல்ல பலன்களைத் தருவதில் தவறுவதில்லை.

பரிகாரம்

நீங்களாகவே பரிகாரம் காண்பதற்கு, இலவச மென்பொருளை கொண்டு, D - 30 எனும் திரிம்சாம்சம் மூலம் அதன் லக்கினம் அமைந்துள்ள வீடு மற்றும் அதன் அதிபதியைக் கண்டு பின் அதற்குரிய கீழ்வரும் பரிகாரம் செய்து கொள்ளுங்கள் அதிர்ஷ்டத்துடன் வாழுங்கள். அதிர்ஷ்டத்தைப் பெறுங்கள்.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் வக்கிரமாக உள்ளதோ அத்தனை கர்மாக்கள் இந்த பிறவியில் காத்திருக்கிறது என அர்த்தம் ஆகிறது. அதனை நீக்குவதே முக்கியமாகும். எந்த கிரகம் வக்கிரம் அடைந்துள்ளதோ அந்த கிரகத்தின் காரகத்துவ உறவுகளுக்கு, உயிர் காரகத்துவத்திற்கு அன்போடும், பண்போடும், இரக்கத்தோடும் நடந்துகொண்டால் போதும் அதுவே சிறந்த பரிகாரமாகும். 

தொடர்புக்கு : 98407 17857  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com