நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதர்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு பிரார்த்தனை நடத்தவுள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
கேதர்நாத் கோயிலில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தவுள்ளார். அதையடுத்து, கடந்த 2013ஆம் ஆண்டில் பெருவெள்ளத்தில் கேதர்நாத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிடவுள்ளார்.
கேதர்நாத் கோயிலில் கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிறகு, கடந்த 2014ஆம் ஆண்டில் சியாச்சின் சிகரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய ராணுவ வீரர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
கடந்த 2015ஆம் ஆண்டில் பஞ்சாப் எல்லையில் இந்திய வீரர்களுடன் தீபாவளியை அவர் கொண்டாடினார். 2016ஆம் ஆண்டில் ஹிமாசலப் பிரதேசத்தில் இந்தோ-திபெத் எல்லையில் வீரர்களுடன் தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடினார்.
2017ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குரேஸில் இந்திய வீரர்களுடன் தீபாவளியை மோடி கொண்டாடினார் என்று மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் குறிப்பிட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








