45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருப்பதி ஏழுமலையானுக்கு இசை அர்ப்பணம் செய்யும் இஸ்லாமிய சகோதரர்கள்

மத ஒற்றுமையும், சகோதரத்துவமும்     இந்தியாவின் அடையாளம் என்பதை உறுதி செய்யும்...

News image
Updated On :19 செப்டம்பர் 2018, 9:23 am

தினமணி

மத ஒற்றுமையும், சகோதரத்துவமும்     இந்தியாவின் அடையாளம் என்பதை உறுதி செய்யும் எத்தனையோ நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அதில் ஒன்று தான் இது. திருப்பதி 
ஏழுமலையான் கோயிலில் இஸ்லாமிய சகோதரர்கள் கடந்த 24 ஆண்டுகளாக ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக கலைக்சேவையாற்றி வருகின்றார்கள். 

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த காசிம், பாபு இருவரும் சகோதரர்கள். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற நாதஸ்வர வித்வான் ஷேக் சின்ன மவுலானாவின் மகன்கள் ஆவர். இவர்கள் தங்கள் தந்தையையே குருவாக ஏற்று 7 வயது முதல் நாதஸ்வரம் கற்கத் தொடங்கினார்கள். தனது 17-ம் வயதில் தனியாக நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பித்த இஸ்லாமிய சகோதரர்கள் கடந்த 24 ஆண்டுகளாக ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக கலைச்சேவையாற்றி வருகிறார்கள். 

இதையடுத்து, பிரம்மோற்சவம், ரச சப்தமி, ஆனி ஆஸ்தானம், தெலுங்கு வருடப் பிறப்பு, திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்விலும் இந்த இஸ்லாமிய சகோதரர்கள் நாதஸ்வர இசையை வாசித்து வருகிறார்கள்.

தற்போது திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெற்றுவரும் இந்த வேளையில் இவர்களது நாதஸ்வர இசை திருமலை முழுவதும் நிறைகிறது. சகோதரர்கள் இருவரின் இசைத் திறமையை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. இவர்களது இசை அர்ப்பணம் மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.