ராகு-கேது பெயர்ச்சியையொட்டி, திருப்பாம்புரம் கோயிலில் பிப்.13 நடைபெறும் சிறப்பு வழிபாட்டுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராகு-கேது பெயர்ச்சி புதன்கிழமை பிற்பகல் 2.02 மணிக்கு நடைபெறுகிறது. ராகு பகவான் கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கும் இடம் பெயர்கின்றனர். இந்த பெயர்ச்சி காரணமாக ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டும் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையொட்டி, நன்னிலம் அருகே உள்ள திருப்பாம்புரத்தில் அருள்மிகு வண்டுசேர்குழலி உடனுறை சேஷபுரீசுவரர் கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கோயிலில் ராகு-கேது தனிச் சன்னிதியில் எழுந்தருளி, அருள்பாலிக்கின்றனர்.
ராகு காலங்களில் இச்சன்னிதியில் அபிஷேகம், அர்ச்சனை செய்வோருக்கு தோஷங்கள் விலகி நலம் கிடைக்கும் என்பதால், தினசரி ராகு கால நேரத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுபோல, பெயர்ச்சி நாளிலும் திரளான பக்தர்கள் வழிபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, ராகு-கேது சன்னிதியில் பக்தர்கள் நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், கோயிலுக்குள் பக்தர்கள் வரிசையாக செல்லும் வகையிலும், சேஷபுரீசுவரரை தரிசிக்கும் பகுதியிலும், வரிசையாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெயர்ச்சி நடைபெறுவது பிற்பகல் நேரம் என்பதால் வெயிலின் தாக்கம் இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு, கோயிலுக்கு வெளியிலும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர கோயிலுக்கு அருகிலேயே குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், வாகனங்கள் நிறுத்துவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை தொடங்கிய முதல் கால பூஜையில் விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து, புதன்கிழமை நடைபெறும் இரண்டாம் கால பூஜையில் சிறப்பு பரிகார ஹோமம், மகா பூர்ணாஹுதி ஆகியவை நடத்தப்படுகின்றன. பெயர்ச்சி நேரமான 2.02 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்.எல்.சி இந்தியா 4வது காலாண்டு லாபம் ரூ. 1,393 கோடியாக உயர்வு!

பேரவையில் பதிலளிக்காமல் வீட்டுக்குச் சென்று முதல்வர் விஜய் அறிக்கை! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிலடி!
பெரும்பான்மையை நிரூபிக்க அசிங்கமான அரசியல் செய்த தவெக! -டிடிவி தினகரன்

ரூ. 17,258 கோடி லாபம் ஈட்டிய ஹெச்பிசிஎல்!!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

